பாமக ஆலோசனைக் கூட்டத்தில் பேசியது என்ன? ராமதாஸ் விளக்கம்!

பாமக ஆலோசனைக் கூட்டத்தில் பேசியது குறித்து ராமதாஸ் விளக்கம்.
பாமக நிறுவனர் ராமதாஸ்.
பாமக நிறுவனர் ராமதாஸ்.கோப்புப்படம்
Updated on
1 min read

தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசியது குறித்து அதன் நிறுவனர் ராமதாஸ் விளக்கமளித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்தில் பாமக மாவட்டச் செயலர்கள் மற்றும் வன்னியர் சங்க மாநில, மாவட்டத் தலைவர்கள் கலந்தாய்வுக் கூட்டம் அதன் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் இன்று(பிப். 26) நடைபெற்றது.

இந்தக் கலந்தாய்வுக் கூட்டத்தில் பாமக, வன்னியர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலர்கள், மாவட்டத் தலைவர்கள் பங்கேற்றனர்.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது, எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.

மாவட்டச் செயலர்கள் கூட்டத்துக்குப் பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ், “திராவிட கட்சிகளோடுதான் கூட்டணி அமையும், யாருடன் கூட்டணி என்பதை பிப். 28ம் தேதிக்குள் அறிவிக்கப்படும்.

கூட்டணி குறித்து தற்போது தெரிவிப்பதற்கான களம் சரியாக அமையவில்லை, இன்றையக் கூட்டத்தில் தேர்தல் உக்திகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது” என்றார்.

பாமகவுக்கான வாகனம் அருகே வந்துவிட்டது என அதன் நிறுவனர் ராமதாஸ், கூட்டணி குறித்து சூசகமாக நேற்று அறிவித்திருந்த நிலையில், திராவிட கட்சிகளுடன் கூட்டணி கூட்டணி அமையும் என்று இன்று தெரிவித்துள்ளார்.

Summary

PMK founder Ramadoss has explained what he said at a consultative meeting held in Tailapuram under the chairmanship of its founder Ramadoss.

பாமக நிறுவனர் ராமதாஸ்.
பாமகவுக்கான வாகனம் அருகில் வந்துவிட்டது: கூட்டணி குறித்து ராமதாஸ் சூசகம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com