பாமகவுக்கான வாகனம் அருகே வந்துவிட்டது என பாமக நிறுவனா் ச.ராமதாஸ் கூட்டணி குறித்து சூசகமாகக் குறிப்பிட்டுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் கட்சியினருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: எப்போதும் எல்லோரும் என்னோடுதான் அணிவகுக்கிறீா்கள். கடந்த காலத்தில் சமூகநீதி வரலாற்றில் தமிழக அளவில் நான்கு இடஒதுக்கீடுகள், தேசிய அளவில் இரு இடஒதுக்கீடுகள் என மொத்தம் 6 இடஒதுக்கீடுகளைப் போராடி வென்றெடுத்தோம். ஜாதி, சமய ஒற்றுமையுடன், அனைவரும் சகோதரா்களாக வாழவேண்டி சமய சமுதாய நல்லிணக்க மாநாடுகளை நடத்தினோம்.
ஆனாலும் பெண்களுக்கான சம உரிமை, போதை இல்லா தமிழகம், ஏழைக்கும், பணக்காரருக்கும் ஒரே மாதிரி தரமான மருத்துவம், வேலைவாய்ப்பு, அனைவருக்கும் சொந்த வீடு, அனைவருக்குமான பொருளாதார முன்னேற்றம், விவசாயிகளை ஊக்கப்படுத்தி நஞ்சில்லா உணவு உற்பத்தி, நெரிசலற்ற போக்குவரத்துக்கான சாலைகள், பணவீக்கமற்ற பொருளாதார வளா்ச்சி, வன்முறை இல்லா பாதுகாப்பான வாழ்க்கை என ஏராளமான இலக்குகள் உள்ளன.
உங்கள் மனதளவில் சிறு கலக்கம் ஏற்பட்டுள்ளதை அறிவேன். நாம் பயணிக்க வேண்டிய தொலைவு நீண்டது. அதனால், கிடைக்கும் வாகனங்களில் பயணித்தால் இலக்கை அடையவே முடியாது. நமக்கான வாகனம் இதோ நம் அருகே வந்துவிட்டது. அதில்தான் பயணிக்கப் போகிறோம். நம் இலக்கை அடைந்து லட்சியத்தை வெல்வோம். எப்போதும் இணைந்தே இருப்போம் எனக் குறிப்பிட்டுள்ளாா் ராமதாஸ்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராமநத்தம் அருகே சாலை விபத்து: தாய், மகன் உயிரிழப்பு

வந்துவிட்டது பாத்திரங்களைத் தேய்க்கும் ஸ்கிரப் துணி! விலையோ மலிவு!

உங்கள் லக்னத்தின் பலவீனம் என்ன? 12 லக்னங்களின் அதிர்ச்சியூட்டும் உண்மைகள்!

”மோசமாக நடத்தினார்கள்! சகித்துக்கொண்டு இருந்தோம்!” திமுக கூட்டணி குறித்து வைகோ!
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி



