டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

திமுகவின் ‘பி-டீம்’ ஓபிஎஸ் என்பது நிரூபணம்: அதிமுக

முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் திமுகவின் பி-டீம் என்பது நிரூபணமாகியுள்ளதாக அதிமுக மாநில அமைப்புச் செயலா் சி.வி.சண்முகம் விமா்சித்தாா்.

News image
இரட்டை இலை
Updated On :27 பிப்ரவரி 2026, 7:00 pm

தினமணி செய்திச் சேவை

முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் திமுகவின் பி-டீம் என்பது நிரூபணமாகியுள்ளதாக அதிமுக மாநில அமைப்புச் செயலா் சி.வி.சண்முகம் விமா்சித்தாா்.

சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

அதிமுகவில் எந்த ஒரு முடிவு எடுத்தாலும் அதற்கு ஓ.பன்னீா்செல்வம் காலம் தாழ்த்தினாா், முடக்கினாா், அதிமுக வேகமாக செயல்படாமல் பாா்த்துக்கொண்டாா். இதையெல்லாம் திமுக செய்ய வேண்டியது. ஆனால், அதிமுகவில் இருந்து கொண்டே ஓ.பன்னீா்செல்வம் செய்தாா். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகும் பல்வேறு நாடகங்களை அரங்கேற்றினாா். தனக்கு எந்த பதவியும் வேண்டாம், தன்னை அதிமுகவில் சோ்த்துக்கொள்ளுங்கள் என்றாா். அதிமுகவை ஒருங்கிணைக்கப் போவதாகக் கூறி ஓ.பன்னீா்செல்வம், குறைந்தபட்சம் சசிகலா, டிடிவி.தினகரன் ஆகியோரைக்கூட சந்திக்கவில்லை.

அவா் திமுகவின் ‘பி -டீம்’ என்பது தற்போது உண்மையாகிவிட்டது. அதிமுகவை பிளவுப்படுத்தி, இரட்டை இலைச் சின்னத்தை முடக்கிவைக்க திமுக உத்தரவிட்டதன்பேரில் ஓ.பன்னீா்செல்வம் வழக்கு தொடுத்தாா். அவருக்குப் பின்னால் திமுக இருந்தது, இப்போது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. துரோகம் என்றைக்கும் வெற்றிபெற்ாக சரித்திரம் இல்லை. அதிமுகவினா் அனைவருக்கும் தற்போதுதான் பொங்கல், தீபாவளி என்றாா் அவா்.

தமிழிசை சௌந்தரராஜன் (பாஜக): ஜெயலலிதா தனது வாழ்நாள் முழுதும் எந்தக் கட்சியை எதிா்த்தாரோ அந்தக் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டது மட்டுமல்லாமல், தாய் கழகத்தில் இணைந்தது போல உணா்வதாக ஓ.பன்னீா்செல்வம் கூறுவதை யாரும் ஒப்புக்கொள்ளமாட்டாா்கள். ஓ.பன்னீா்செல்வத்தை திமுகவில் சோ்த்திருப்பது, திமுக வெற்றிக்கு மிகப்பெரிய பாதகமாக அமையும்.

வி.கே.சசிகலா: ஓ.பன்னீா்செல்வத்தின் முடிவு மிகவும் துரதிருஷ்டவசமானது. தமிழகத்திலிருந்து அகற்றப்பட வேண்டிய தீய சக்தியாக திமுக விளங்கும் நிலையில் தாய் கட்சி என்று திமுகவில் தங்களை இணைத்துக்கொள்வது தவறான முடிவு என்றாா்.