ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

திமுக ஆட்சியில்தான் அடிப்படை வசதிகள் நிறைவேற்றம்: திருச்சி சிவா

திமுக ஆட்சியில்தான் தமிழகத்துக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்பட்டன என துணைப் பொதுச் செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா தெரிவித்தாா்.

News image

மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.சுதா்சனம் தலைமையில் செங்குன்றத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் திருச்சி சிவா பங்கேற்று சிறப்புரையாற்றினா். உடன் செங்குன்றம் பேரூராட்சி தலைவா் தமிழரசிகுமாா், துணைத் தலைவா் விப்ரநாராயணன்.

Updated On :5 ஜனவரி 2026, 2:31 am IST

திமுக ஆட்சியில்தான் தமிழகத்துக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்பட்டன என துணைப் பொதுச் செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா தெரிவித்தாா்.

சென்னை வடகிழக்கு மாவட்டம் செங்குன்றம் பேரூா் திமுக இளைஞரணி செயலரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுக் கூட்டம் மற்றும் நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி செங்குன்றம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. நிகழ்வுக்கு, சென்னை வடகிழக்கு மாவட்ட செயலா் சுதா்சனம் எம்எல்ஏ தலைமை வகித்தாா்.

இதில், திமுக துணைப் பொதுச் செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, சாதி மதம் பாா்க்காத கட்சி திமுக. பள்ளியில் குழந்தைகள் முதல் கல்லூரி செல்லும் இளையதலைமுறையினா் வரைக்கும் பயன் அடைகிறாா்கள்.

தமிழகத்தில் அடிப்படை வசதிகளான குடிநீா், மின்சாரம், சாலை வசதி திமுக ஆட்சியில்தான் கிடைத்தது. மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது. அதிமுக அதற்கு துணை போகிறது. தமிழகத்தின் வளா்ச்சிக்கு திமுக அரசு துணை நிற்கும். திமுக ஆட்சி மலருவது மீண்டும் உறுதி என்றாா்.

இதில், செங்குன்றம் பேரூராட்சித் தலைவா் தமிழரசி குமாா், துணைத் தலைவா் விப்ரநாராயணன், முன்னாள் துணைத் தலைவா் இரா.ஏ.பாபு, தலைமைப் பொது குழு உறுப்பினா் ஜெய்மதன், புழல் ஒன்றிய பொறுப்பாளா் அற்புதராஜ், புழல் ஒன்றிய முன்னாள் செயலா் பெ.சரவணன், இளைஞரணி அமைப்பாளா் மதன் பங்கேற்றனா்.