மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

நந்தனார் மடத்தில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தகால் நடும் நிகழ்ச்சி

ஓமக்குளம் பகுதியில் உள்ள நந்தனார் மடத்தில் சிவலோகநாதர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தகால் நடும் நிகழ்ச்சி...

சிதம்பரம் ஓமக்குளம் நந்தனார் மடத்தில் உள்ள சிவலோகநாதர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை அமைக்க புதன்கிழமை பந்தகால் நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த நந்தனார் கல்விக்கழகத் தலைவர் கே.ஐ.மணிரத்தினம்

Published On :

சிதம்பரம்: சிதம்பரம் ஓமக்குளம் பகுதியில் உள்ள நந்தனார் மடத்தில் சிவலோகநாதர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தகால் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை (ஜன. 7) காலை நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள நந்தனார் மடத்தில் உள்ள செளந்தரநாயகி சமேத சிவலோகநாதர் கோயில் 32 ஆண்டுகளுக்கு பிறகு ஜன. 28 ஆம் தேதி புதன்கிழமை காலை 9.30 மணிக்கு மேல் 10 மணிக்குள் மகாகும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

மேலும், நந்தனாரின் தியான மண்டபம் புதுப்பிக்கப்பட்டு அதில் நந்தனாரின் வரலாறும், சுவாமி சகஜானந்தா வரலாறும் வைக்கப்படவுள்ளது. இந்நிலையில், கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை அமைக்க பந்தகால் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை காலை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் நந்தனார் கல்விக்கழகத் தலைவர் கே.ஐ. மணிரத்தினம், உஷா மணிரத்தினம் ஆகியோர் பந்தகால் நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் கமல் மணிரத்தினம், அரவிந்த் மணிரத்தனம், கல்விக்கழக செயலாளர் வி.திருவாசகம், பொருளாளர் டி.ஜெயச்சந்திரன், மட நிர்வாகக்குழு செயலாளர் டி.கே.எம்.வினோபா, நிர்வாகிகள் ஏ.சங்கரன், பி.பன்னீர்செல்வம் மற்றும் கஜேந்திரன், மணலூர் ரவி, தமிழரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Summary

Nandhanar Mutt in preparation for the consecration ceremony

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.