ஓரிரு நாள்களில் அதிமுக கூட்டணியில் புதிய கட்சி ஒன்று இணையவுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக வேட்பாளர் நேர்காணல் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னதாக அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட 2,000 -க்கும் அதிகமான விருப்ப மனுக்கள் அளிக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் செய்து வருகிறார்.
அவ்வாறு இன்று நேர்காணலுக்கு வந்தவர்களிடம் இபிஎஸ் பேசுகையில்,
"அதிமுக கூட்டணியில் ஒரு சில நாள்களில் புதிய கட்சி இணையவுள்ளது. அதிமுக கூட்டணி வலிமையாக உள்ளது. மேலும் சில கட்சிகளுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். நம்பிக்கையுடன் இருங்கள். அதிமுக வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். தேர்தலில் வெற்றி பெற அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்" என்று பேசியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக, பாஜக, பாமக(அன்புமணி) ஆகியோர் இணைந்துள்ள நிலையில் புதிதாக இணையவுள்ள கட்சி எது? என பரபரப்பு கிளம்பியுள்ளது.
தேமுதிக, பாமக(ராமதாஸ் தரப்பு), ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோருடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
Summary
A new party will join the AIADMK alliance in a day or two: EPS
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
'நான்தான் எல்லாம்' என்பது கூடாது! இபிஎஸ் அழைத்தால் பேசத் தயார்! எஸ்.பி. வேலுமணி

ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்

எடப்பாடியில் குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார் இபிஎஸ்!

ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்கப்படும்! இபிஎஸ் வாக்குறுதி
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike




