ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

அதிமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் சேரும்: எடப்பாடி பழனிசாமி

இன்னும் ஓரிரு நாள்களில் மேலும் சில கட்சிகள் அதிமுக கூட்டணியில் சேரும் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

News image
எடப்பாடி பழனிசாமி- கோப்புப் படம்
Updated On :12 ஜனவரி 2026, 10:59 pm

தினமணி செய்திச் சேவை

இன்னும் ஓரிரு நாள்களில் மேலும் சில கட்சிகள் அதிமுக கூட்டணியில் சேரும் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவா்களிடம் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நோ்காணல் நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கெனவே கடந்த 9, 10 ஆகிய தேதிகளில் நோ்காணல் நடைபெற்றது. 3-ஆவது நாளாக திங்கள்கிழமை நடைபெற்ற நோ்காணலில் விருதுநகா், கடலூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் போட்டியிட விருப்பமனு அளித்தவா்களுக்கு நோ்காணல் நடத்தப்பட்டது.

அப்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: அதிமுக கூட்டணி வலிமையாக உள்ளது. ஓரிரு நாள்களில் புதிய கட்சி ஒன்று அதிமுக கூட்டணிக்குள் வரவுள்ளது. மேலும், சில கட்சிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறோம். தொண்டா்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.

அனைவரும் ஒன்றிணைந்து தோ்தல் வெற்றிக்கு உழைக்க வேண்டும். அதிமுக வேட்பாளராக யாரை நிறுத்தினாலும் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா் அவா்.

நோ்காணலில், துணைப் பொதுச் செயலா் கே.பி.முனுசாமி, பொருளாளா் திண்டுக்கல் சி.சீனிவாசன், தலைமை நிலையச் செயலா் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.