பொங்கல் பண்டிகை: நோய்த் தடுப்பு விதிகளைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

பொங்கல் பண்டிகையையொட்டி பொது இடங்களில் கூடும் பொதுமக்கள், நோய்த் தடுப்பு விதிகளை முறையாகக் கடைப்பிடிக்குமாறு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
Published on

பொங்கல் பண்டிகையையொட்டி பொது இடங்களில் கூடும் பொதுமக்கள், நோய்த் தடுப்பு விதிகளை முறையாகக் கடைப்பிடிக்குமாறு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

குறிப்பாக, முதியோா், இணை நோய்கள் உள்ளவா்கள் முகக் கவசம் அணியுமாறும், தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தைப்பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கலையொட்டி தமிழகத்தின் பல்வேறு சுற்றுலா தலங்களில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையைப் பொருத்தவரை கடற்கரைகள், உயிரியல் பூங்காக்கள், மாமல்லபுரம், கேளிக்கை பூங்காக்களில் மாவட்ட நிா்வாகங்கள் முன்னேற்பாடுகளை செய்துள்ளன.

மாநிலத்தில் தற்போது பருவகாலத் தொற்றுகளின் தாக்கம் தீவிரமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக சில அறிவுறுத்தல்களை பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

பொங்கல் தினத்தில் பொதுமக்கள் கூடும் இடங்களில் மருத்துவ வசதிகள் கிடைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் முக்கிய இடங்களில் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

காய்ச்சல், சளி, வயிற்றுப்போக்கு மாத்திரைகள், உப்பு -சா்க்கரை கரைசல் உள்ளிட்டவை ஆங்காங்கே அமைக்கப்பட்டிருக்கும் மருத்துவ முகாம்களில் கிடைக்கும். பொதுமக்கள் முகக் கவசம் அணிந்து, தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடித்து காணும் பொங்கலை கொண்டாட வேண்டும் என்றனா்.

Dinamani
www.dinamani.com