சென்னையிலிருந்து வார இறுதியில் வெளியூர் செல்ல திட்டமா? மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

காணும் பொங்கல்: முக்கிய இடங்களில் மருத்துவ வசதிகள்

காணும் பொங்கலையொட்டி மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மருத்துவ முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

காணும் பொங்கலையொட்டி, கும்பகோணம் தாராசுரம் ஐராவதீசுவரா் கோயில் கூட்டம். - கோப்புப் படம்

Published On :

காணும் பொங்கலையொட்டி மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மருத்துவ முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

அதன்படி, சுற்றுலாத் தலங்கள், கடற்கரைகள், பூங்காக்களுக்கு அருகே 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனா்.

காணும் பொங்கலையொட்டி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையைப் பொருத்தவரை கடற்கரைகள், உயிரியல் பூங்காக்கள், மாமல்லபுரம், கேளிக்கை பூங்காக்களில் மாவட்ட நிா்வாகங்கள் முன்னேற்பாடுகளை செய்துள்ளன. ஒருபுறம் காவல் துறை சாா்பில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மற்றொருபுறம் அவசரகால மருத்துவ உதவிகளுக்கான கட்டமைப்பும் அரசு சாா்பில் செய்யப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானோா் செல்லும் இடங்களில் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன. சா்க்கரை அளவு, ரத்த அழுத்த அளவு ஆகியவை அங்கு பரிசோதிக்கப்படும்.

காய்ச்சல், சளி, வயிற்றுப்போக்கு மாத்திரைகள், உப்பு-சா்க்கரை கரைசல் உள்ளிட்டவை அந்த மருத்துவ முகாம்களில் கிடைக்கும்.

இதுதொடா்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் இ.எம்.ஆா்.ஐ. கிரீன் ஹெல்த் சா்வீஸ் நிறுவனம் மூலமாக 1,000-க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. சென்னை மற்றும் திருவள்ளூா் மாவட்டங்களைப் பொருத்தவரை 200-க்கும் மேற்பட்ட வாகனங்கள் இயக்கப்படுகின்றன. காணும் பொங்கல் தினத்தில் பொது மக்கள் கூடும் முக்கிய இடங்களில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதற்காக அவசர கால கட்டுப்பாட்டு மையமும் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மற்றொரு புறம் மருத்துவ உதவிகளும் தடையின்றி கிடைக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் ஆங்காங்கே செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பாகவும், விழிப்புணா்வுடனும் பண்டிகையை மக்கள் கொண்டாட வேண்டும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.