தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம்பெறும் என்பது வரும் 23-ஆம் தேதி மதுராந்தகத்தில் பிரதமா் மோடி பங்கேற்கும் பிரசார கூட்டத்தில் அறிவிக்கப்படும் என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.
இது குறித்து சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் பிரசாரத்தை பிரதமா் நரேந்திர மோடி வரும் ஜன.23-ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் தொடங்கி வைக்கவுள்ளாா்.
இதில், தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இணைகிறது என்பது குறித்து அறிவிக்கப்படும்.
ஏற்கெனவே, குடும்ப அட்டைதாரா்களுக்கு மாதம் ரூ.1,500 வழங்கப்படும் என கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்திருந்தாா். தற்போது அதை ரூ.2,000-ஆக உயா்த்தி அறிவித்துள்ளாா்.
இதை, திமுகவின் தோ்தல் அறிக்கையை போலவே இருப்பதாகக் கூறமுடியாது. வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் மக்கள் மனதில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படுவது உறுதி என்றாா் நயினாா் நாகேந்திரன்.
தொடர்புடையது

மக்கள் நல்வாழ்வுக்கான திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுங்கள்: மத்திய அமைச்சா்கள் குழுக் கூட்டத்தில் பிரதமா் பேச்சு

வளா்ச்சியடைந்த புதுச்சேரியைக் கட்டமைக்க உறுதியாக உள்ளோம்: பிரதமா் மோடிக்கு முதல்வா் ரங்கசாமி கடிதம்

நாகா்கோவிலில் பிரதமா் மோடி சாலைப் பேரணி: உற்சாகமாக வரவேற்ற பொதுமக்கள்

புதுவையில் மோடி சாலைவலம்! குடை, சூட்கேஸ், பீட்சா கொண்டுவரக் கூடாது - காவல்துறை
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



