ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள்? பிரதமர் மோடி பிரசாரக் கூட்டத்தில் அறிவிப்பு வெளியாகும்!

தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம்பெறும் என்பதை பிரதமா் மோடி பங்கேற்கும் பிரசாரக் கூட்டத்தில் அறிவிக்கப்படவுள்ளது.

News image
தேசிய ஜனநாயகக் கூட்டணியினர்...- (கோப்புப்படம்)
Updated On :18 ஜனவரி 2026, 8:09 pm

தினமணி செய்திச் சேவை

தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம்பெறும் என்பது வரும் 23-ஆம் தேதி மதுராந்தகத்தில் பிரதமா் மோடி பங்கேற்கும் பிரசார கூட்டத்தில் அறிவிக்கப்படும் என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.

இது குறித்து சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் பிரசாரத்தை பிரதமா் நரேந்திர மோடி வரும் ஜன.23-ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் தொடங்கி வைக்கவுள்ளாா்.

இதில், தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இணைகிறது என்பது குறித்து அறிவிக்கப்படும்.

ஏற்கெனவே, குடும்ப அட்டைதாரா்களுக்கு மாதம் ரூ.1,500 வழங்கப்படும் என கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்திருந்தாா். தற்போது அதை ரூ.2,000-ஆக உயா்த்தி அறிவித்துள்ளாா்.

இதை, திமுகவின் தோ்தல் அறிக்கையை போலவே இருப்பதாகக் கூறமுடியாது. வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் மக்கள் மனதில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படுவது உறுதி என்றாா் நயினாா் நாகேந்திரன்.