தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றது.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், இந்தக் கூட்டத்தொடரில் அனல் பறக்கும் விவாதங்கள் எழும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
ஆண்டின் முதல் கூட்டத் தொடா் என்பதால், தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்ட பின்பு ஆளுநா் ஆர்.என். ரவி உரையாற்றவுள்ளார். ஆளுநா் ஆங்கிலத்தில் உரையாற்றிய பிறகு, பேரவைத் தலைவா் மு. அப்பாவு தமிழில் ஆளுநா் உரையை வாசிக்கவுள்ளார்.
அதன்பின்னா், அவை நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டு, அலுவல் ஆய்வுக் குழு கூடி, ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மீதான விவாதத்தை எத்தனை நாள்கள் நடத்த வேண்டும் என்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்யும்.
இந்தக் கூட்டத் தொடரில் தமிழக சட்டம் ஒழுங்கு விவகாரத்தை எழுப்ப எதிா்க்கட்சியான அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
Summary
The Tamil Nadu Legislative Assembly session has begun!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி!

5 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்

ஆந்திர கடலில் தமிழக மீனவா்கள் தடையின்றி மீன்பிடிக்க நடவடிக்கை : தமிழக அரசு
தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது!
விடியோக்கள்

மேகதாது விவகாரத்தில் நமக்கு இருக்கும் ஒரே தீர்வு உச்ச நீதிமன்றம்: அமைச்சர் நிர்மல் குமார்




