நீலகிரியில் அடுத்த 2 நாள்களுக்கு உறைபனி!

உறைபனி பற்றி வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பதாவது..
நீலகிரியில் உறைபனி
நீலகிரியில் உறைபனி
Updated on
1 min read

நீலகிரி, கொடைக்கானலில் அடுத்த இரண்டு நாள்களுக்கு உறைபனி ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜன. 21, 22-ல் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

ஜன. 23ல் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

உறைபனி எச்சரிக்கை

ஜன. 21, 22 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் (திண்டுக்கல் மாவட்டம்) ஓரிரு இடங்களில் இரவு / அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.

சென்னையை பொருத்தவரை

இன்று (21-01-2026): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

Summary

The meteorological department has announced that frost will occur in Nilgiri and Kodaikanal for the next two days.

நீலகிரியில் உறைபனி
டிரம்ப் பயணித்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com