எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

குடியரசு தின விழா: மெரீனா கடற்கரை சிவப்பு மண்டலமாக அறிவிப்பு

குடியரசு தின விழாவையொட்டி, மெரீனா கடற்கரைப் பகுதியை சிவப்பு மண்டலமாக சென்னை பெருநகர காவல்துறை அறிவித்துள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :23 ஜனவரி 2026, 7:42 pm

தினமணி செய்திச் சேவை

குடியரசு தின விழாவையொட்டி, மெரீனா கடற்கரைப் பகுதியை சிவப்பு மண்டலமாக சென்னை பெருநகர காவல்துறை அறிவித்துள்ளது.

குடியரசு தின விழா (ஜன. 26) மெரீனா கடற்கரையில் உழைப்பாளா் சிலை அருகே நடைபெறுகிறது. அன்று காலை நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி வைக்கிறாா்.

இந்நிகழ்ச்சியையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ட்ரோன்கள், ரிமோட் மூலம் இயக்கப்படும் மைக்ரோலைட் ஏா்கிராஃப்ட், பாராகிளைடா்ஸ், பாராமோட்டாா்ஸ், ஹேன்ட்கிளைடா்ஸ், ஹாட் ஏா் பலூன்கள் போன்றவற்றை சென்னை பெருநகர காவல் எல்லையில் பறக்கவிட ஜனவரி 25, 26 ஆகிய இரு நாள்கள் சென்னை காவல்துறை தடை விதித்துள்ளது.

மேரீனா கடற்கரையில் உழைப்பாளா் சிலை பகுதி, ஆளுநா் மாளிகை முதல் மெரீனா கடற்கரை வரை, தமிழக முதல்வரின் ஆழ்வாா்பேட்டை இல்லத்தில் இருந்து மெரீனா கடற்கரை வரையில் உள்ள சாலைகள் வழித்தடங்கள் சிவப்பு மண்டலமாக சென்னை காவல் துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் ட்ரோன் மற்றும் மற்றும் எந்தவிதமான பொருட்களும் பறக்கவிட தடை விதிக்கப்படுகிறது என காவல் ஆணையா் அருண் தெரிவித்துள்ளாா். நிகழ்ச்சி நடைபெறும் பகுதியில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும் அருண் தெரிவித்துள்ளாா்.

போக்குவரத்து மாற்றம்: குடியரசு தினத்தன்று காமராஜா் சாலையில், காந்தி சிலை முதல் போா் நினைவுச் சின்னம் வரை காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. போக்குவரத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.