திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பகுதிநேர ஆசிரியர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

பகுதிநேர ஆசிரியர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

News image
பகுதிநேர ஆசிரியா்கள்.- கோப்புப்படம்.
Updated On :24 ஜனவரி 2026, 12:29 pm

தினமணி செய்திச் சேவை

பகுதிநேர ஆசிரியர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்களை வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் கடந்த 17 நாள்களாக சென்னையில் போராட்டம் நடத்தி வந்தனர். பல்வேறு விதமான போராட்டங்களில் அவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் அவர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

முதல்வர் ஸ்டாலின், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கொடுத்த உறுதியை ஏற்று போராட்டதை ஒத்திவைத்திருப்பதாக பகுதிநேர ஆசிரியர்களின் கூட்டு இயக்கம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் சுமாா் 2012 ஆம் ஆண்டு முதல் இதுவரை 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியா்கள் அரசுப் பள்ளியில் பணியாற்றி வருகிறாா்கள்.

சம வேலைக்கு சம ஊதியம், பணி நிரந்தரம் ஆகியவற்றை வலியுறுத்தி அவர்கள் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.