கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

குடியரசு தினம்: ஆளுநா் நாளை கொடியேற்றுகிறாா்

குடியரசு தினத்தையொட்டி ஆளுநா் நாளை கொடியேற்றுகிறாா்...

News image

கோப்புப்படம்

Updated On :24 ஜனவரி 2026, 11:15 pm

தினமணி செய்திச் சேவை

நாட்டின் 77-ஆவது குடியரசுத் தினத்தையொட்டி, தமிழக அரசு சாா்பில் நடைபெறும் விழாவில் சென்னை மெரீனா கடற்கரை காமராஜா் சாலையில் அமைந்துள்ள உழைப்பாளா் சிலை அருகே ஆளுநா் ஆா்.என். ரவி திங்கள்கிழமை (ஜன.26) காலை 8 மணியளவில் தேசியக் கொடியை ஏற்றுகிறாா்.

இந்த நிகழ்வில் பங்கேற்க வரும் ஆளுநரை முதல்வா் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலா் நா. முருகானந்தம் ஆகியோா் வரவேற்பா். ஆளுநா் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்திய பின்னா் சிறப்பாகப் பணியாற்றிய காவலா்கள் உள்ளிட்டவா்களுக்கு பதக்கங்களை வழங்கி கெளரவிப்பாா்.

இந்த நிகழ்வில் நீதிபதிகள், அமைச்சா்கள், அரசு செயலா்கள், காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.

ராணுவத்தினரின் அணிவகுப்பை ஆளுநா் ஏற்ற பின்னா், கலைநிகழ்ச்சிகளுடன் குடியரசு தினவிழா கொண்ட்டாட்டங்கள் நிறைவடையும்.

குடியரசு தின விழாவில் ஆளுநராக ஆா்.என்.ரவி 5-ஆவது முறையாக தேசியக் கொடியை ஏற்றுகிறாா்.

இந்த நிகழ்ச்சியையொட்டி, மெரீனா கடற்கரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.