புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை!

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்தது பற்றி..
கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை
கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஜனவரி 28 (நாளை) உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாநகர், திருவப்பூரிலுள்ள முத்துமாரியம்மன் திருக்கோயிலின் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நாளை (ஜன. 28- புதன்கிழமை) நடைபெறவுள்ளது.

இதையொட்டி, மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மு. அருணா உத்தரவிட்டுள்ளார். இந்த நாளுக்கு மாற்றாக வரும் பிப். 7ஆம் தேதி சனிக்கிழமை பணி நாளாகவும் அவர் அறிவித்துள்ளார்.

மேலும், புதன்கிழமை கருவூலங்கள் மட்டும் குறைந்த எண்ணிக்கைப் பணியாளர்களைக் கொண்டு செயல்படும் என்றும், பள்ளி, கல்லூரிகளில் அரசுத் தேர்வுகள் முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என்றும் ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார்.

Summary

District Collector Aruna has issued an order declaring a local holiday for Pudukkottai district on January 28 (tomorrow).

கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை
எம்.ஜி.யின் புதிய வரவு... மெஜஸ்டர் பிப்.12ல் அறிமுகம்!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com