பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

காரைக்குடி அருகே புதிய வேளாண் கல்லூரியைத் திறந்துவைத்தார் முதல்வர்!

காரைக்குடி அருகே வேளாண் கல்லூரி திறப்பு விழா பற்றி..

News image

காரைக்குடி அருகே புதிய வேளாண் கல்லூரியைத் திறந்துவைத்தார் முதல்வர்.

DIPR

Updated On :31 ஜனவரி 2026, 5:20 am

இணையதளச் செய்திப் பிரிவு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே புதிய வேளாண் கல்லூரியை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் 2 நாள் பயணமாக சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார். அங்கு ரூ. 2,872 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடக்கிவைக்கிறார்.

சிவகங்கையில் காரைக்குடி அருகே கானாடுகாத்தானில் ரூ. 61.78 கோடி மதிப்பில் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். வேளாண் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள சி.சுப்பிரமணியம் பன்னோக்கு அரங்கத்தையும் திறந்து வைத்தார்.

மேலும் காரைக்குடியில் அரசு சட்டக்கல்லூரியை திறந்துவைத்து முதல்வர், டைடல் நியோ பூங்காவையும் பயன்பாட்டிற்கு திறந்துவைத்தார்.

மேலும் மக்களுக்கு அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.

முன்னதாக சிவகங்கை மாவட்டத்துக்கு வந்துள்ள முதல்வருக்கு திமுக நிர்வாகிகள், அரசு அதிகாரிகள், மக்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.