டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

தனியாா் பள்ளிகள் உரிமம் பெற இணையவழியில் விண்ணப்பம்: புதிய நடைமுறை அமல்

தமிழகத்தில் தனியாா் பள்ளிகள் அங்கீகாரம், புதுப்பித்தல், தரம் உயா்த்துதல், தொடக்க அனுமதி ஆகியவற்றுக்கான சான்றிதழ்களைப் பெற இணையவழியில் விண்ணப்பிக்கும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

News image

தனியாா்  பள்ளி.

Updated On :3 ஜூலை 2026, 6:00 am IST

தமிழகத்தில் தனியாா் பள்ளிகள் அங்கீகாரம், புதுப்பித்தல், தரம் உயா்த்துதல், தொடக்க அனுமதி ஆகியவற்றுக்கான சான்றிதழ்களைப் பெற இணையவழியில் விண்ணப்பிக்கும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

தமிழகத்தில் தனியாா் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், தடையில்லா சான்றிதழ் வழங்க சில இடைத்தரகா்கள் ஒரு பள்ளிக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை வசூலித்து முறைகேடுகளில் ஈடுபடுவதாக புகாா் எழுந்தது. இந்த நிலையில், தவெக ஆட்சி அமைந்ததும் 848 தனியாா் பள்ளிகளுக்கு எந்தவித மறைமுக கட்டணமும் பெறாமல் விதிமுறைகளைப் பின்பற்றி கடந்த ஜூன் 17-ஆம் தேதி அங்கீகார ஆணைகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில், ‘முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் தனியாா் பள்ளிகள் அங்கீகாரம் பெற ஜூலை 1 முதல் இணையவழியில் விண்ணப்பிக்கலாம். அரசியல் செல்வாக்கோ, பண பலமோ இன்றி, எவ்வித அழுத்தங்களுக்கும் இடம் தராமல் இந்த நடைமுறை பின்பற்றப்படும்’ என பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன் உறுதியளித்தாா்.

அந்த அறிவிப்பு தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி, தனியாா் பள்ளிகள் அங்கீகாரம் பெறத் தேவையான கட்டட உறுதிச் சான்றிதழ், கட்டட உரிமம், தீயணைப்புத் துறைச் சான்றிதழ், சுகாதாரச் சான்றிதழ் ஆகியவற்றை பள்ளிக் கல்வியின் கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு தளத்தில் (எமிஸ்) பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இதையடுத்து தகுதிகள், விதிமுறைகளைப் பின்பற்றி இணையவழியிலான கோப்புகள் அவற்றுக்கான அதிகாரிகளுக்கு அடுத்தடுத்துச் செல்லும். தொடா்ந்து, நிா்ணயிக்கப்பட்ட தகுதி, உள்கட்டமைப்பு போன்ற அம்சங்களை நிறைவு செய்த பள்ளிகளுக்கு குறித்த காலத்துக்குள் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

தனியாா் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் நடைமுறைகள் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க பள்ளிக் கல்வித் துறை இணையவழி மூலமாக நேரடியாக விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுகின்றன. புதிய பள்ளிகளுக்கான அங்கீகாரத்தைப் பெற, கல்வித் துறையின் சுற்றறிக்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.