சேவூர் அருகே ஒச்சாம்பாளையத்தில், நில விவகாரத்தில் விவசாயிகள் மீது போடப்பட்ட வன்கொடுமை வழக்கைக் கண்டித்து விவசாயிகள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவிநாசி வட்டம், சேவூர் அருகே ஒச்சாம்பாளையம் நில விவகாரம் தொடர்பாக இருதரப்பினரிடையே நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஒரு தரப்பைச் சேர்ந்த விவசாயிகள் இருவர் மீது சேவூர் போலீஸார் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்தனர். இதைக் கண்டித்தும், இவ்வழக்கைத் திரும்பப் பெறக் கோரியும், விவசாயிகள் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேவூர் கைகாட்டி ரவுண்டான பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்குக் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ஏ.கே. சண்முகம் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ஈஸ்வரன், கிராமிய மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சம்பத், வேட்டுவ பாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர் கணேசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், தீரன்சின்னமலை இளைஞர் பேரவையினர், பாதிக்கப்பட்ட விவசாய குடும்பத்தினர் என சேவூர், அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளை ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். மேலும் விரைவில் வன்கொடுமை வழக்கை ரத்து செய்யாவிட்டால், கடையடைப்பு, கால்நடை மற்றும் குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனக் கூறி கலைந்து சென்றனர்.
Farmers staged a protest on Wednesday in Ochampalayam, near Sevur, condemning the atrocity case filed against them in connection with a land dispute.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சேவூரில் விவசாயிகள் மீது போடப்பட்ட வன்கொடுமை வழக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்: தவ்ஹீத் ஜமாஅத் பேரணி

சிப்காட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

பயிர்க்கடன் தள்ளுபடி, மின்வெட்டு... தவெக அரசு எதிராக அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!
விடியோக்கள்

ஒரு அக்காவைப் போலவே அமைச்சர் கீர்த்தனா மாணவியிடம் பேசினார்! - அமைச்சர் Rajmohan | TVK

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna




