FOLLOW US

ON GOOGLE DISCOVER

ஜூனில் கடைசி 2 வாரங்களில் வங்கிகளில் குவிந்த ரூ. 7 லட்சம் கோடி டெபாசிட்!டாஸ்மாக் மதுவுக்கு கூடுதலாக ரூ. 10 வசூலை தடுக்க சட்ட விதிகளில் திருத்தம்: தமிழக அரசு முடிவுதேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்மேற்கு கரையில் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய வம்சாவளி அமெரிக்க எம்.பி.!தேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்
/

வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் மதுரையில் கைது!

பிக்பாஸ் பிரபலம் `வாட்டர் மெலன் ஸ்டார்' திவாகர் மதுரையில் கைது பற்றி....

News image

வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் - படம் - எக்ஸ்

Updated On :12 ஜூலை 2026, 1:07 pm IST

பிக்பாஸ் பிரபலம் `வாட்டர் மெலன் ஸ்டார்' திவாகர் மதுரையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

யூடியூப் சேனல் ஊழியரை ஒரு லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியதாக பிக்பாஸ் பிரபலம் `வாட்டர் மெலன் ஸ்டார்' திவாகர் மீது சென்னை கீழ்பாக்கம் போலீஸில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து திவாகர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த புகாரின் அடிப்படையில் `வாட்டர் மெலன் ஸ்டார்' திவாகர் மதுரையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து திவாகரை சென்னை அழைத்துச் சென்று போலீஸார் விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். சமீப காலமாக திவாகர் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

மதுரையைச் சேர்ந்தவரான திவாகர் இன்ஸ்டாகிராமில் 'வாட்டர் மெலன் ஸ்டார்' என்ற பெயரில் புகழ்பெற்றவர். மேலும் இவர் பிக்பாஸ் 9 சீசனில் போட்டியாளராகவும் பங்கேற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Bigg Boss fame Watermelon Star Diwakar has been arrested in Madurai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.