உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

யூடியூபர் மாரிதாஸ் மதுரையில் கைது

தவெகவினர் அளித்த புகார்களைத் தொடர்ந்து யூடியூபர் மாரிதாஸ் அவரது மதுரை வீட்டில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளார்.

 YouTuber Maridhas Arrested in Madurai

யூடியூபர் மாரிதாஸ்

Published On :

தவெகவினர் அளித்த புகார்களைத் தொடர்ந்து யூடியூபர் மாரிதாஸ் அவரது மதுரை வீட்டில் இருந்து இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகளை ஏஐ புகைப்படங்கள் மூலம் பரப்புவதாக யூடியூபர் மாரிதாஸ் மீது தவெகவினர் புகார் கூறி வந்தனர். இந்த நிலையில் இன்று மதுரை வந்த சென்னை சைபர் கிரைம் போலீஸார், யூடியூபர் மாரிதாஸை கைது செய்தனர். இதனை மாரிதாஸ் தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மதுரையில் கைது செய்யப்பட்டுள்ள மாரிதாஸை சென்னை அழைத்து வந்து விசாரணை மேற்கொள்ள போலீஸார் திட்டமிட்டுள்ளனர். இருப்பினும் மாரிதாஸ் கைது செய்யப்பட்டதற்கான காரணம் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.

முன்னதாக தவெகவை விமர்சித்ததாக பாளையங்கோட்டையைச் சேர்ந்த ஜேம்ஸ் ராஜா கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். இதனிடையே யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டதற்கு பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

Summary

YouTuber Maridhas has been arrested at his residence in Madurai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.