போட்டியின்றி எம்.பி.யாகிறார் பிரவீண் சக்ரவர்த்தி!நீட், சிபிஎஸ்இ விவகாரம்: மத்திய அமைச்சர் பதவி விலக வேண்டும் - வைகோஎம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார் திரிணமூல் மூத்த தலைவர்! கட்சியிலிருந்தும் விலகல்!யூடியூபர் மாரிதாஸ் மதுரையில் கைது மானவ் சுதர் அசத்தல்! முதல் இன்னிங்ஸில் 152 ரன்களுக்கு சுருண்டது ஆப்கானிஸ்தான்! மின்வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!
/

மாரிதாஸ் கைது ஏன்? சைபர் கிரைம் போலீஸார் விளக்கம்

மாரிதாஸ் கைது குறித்து சைபர் கிரைம் போலீஸார் விளக்கமளித்துள்ளனர்.

News image

மாரிதாஸ்

Updated On :8 ஜூன் 2026, 3:13 pm IST

யூடியூபர் மாரிதாஸ் கைது குறித்து சைபர் கிரைம் போலீஸார் விளக்கமளித்துள்ளனர்.

அதில், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா குறித்து ஏஐ புகைப்படத்தை வெளியிட்டு அவதூறு பரப்பியதால் மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவெகவினர் அளித்த புகார்களைத் தொடர்ந்து யூடியூபர் மாரிதாஸ் அவரது மதுரை வீட்டில் இருந்து இன்று கைது செய்யப்பட்டுள்ளார். உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகளை ஏஐ புகைப்படங்கள் மூலம் பரப்புவதாக யூடியூபர் மாரிதாஸ் மீது தவெகவினர் புகார் கூறி வந்தனர்.

இந்த நிலையில் இன்று மதுரை வந்த சென்னை சைபர் கிரைம் போலீஸார், யூடியூபர் மாரிதாஸை கைது செய்தனர். கைதாவதற்கு முன் இதனை மாரிதாஸ் தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மதுரையில் கைது செய்யப்பட்டுள்ள மாரிதாஸை சென்னை அழைத்து வந்து விசாரணை மேற்கொள்ள போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

முன்னதாக தவெகவை விமர்சித்ததாக பாளையங்கோட்டையைச் சேர்ந்த ஜேம்ஸ் ராஜா கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். இதனிடையே யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டதற்கு பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

Summary

The Cyber Crime police have clarified that Maridhas was arrested for spreading slander by releasing an AI-generated photo of Industries Minister Keerthana.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.