யூடியூபர் மாரிதாஸ் கைது குறித்து சைபர் கிரைம் போலீஸார் விளக்கமளித்துள்ளனர்.
அதில், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா குறித்து ஏஐ புகைப்படத்தை வெளியிட்டு அவதூறு பரப்பியதால் மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவெகவினர் அளித்த புகார்களைத் தொடர்ந்து யூடியூபர் மாரிதாஸ் அவரது மதுரை வீட்டில் இருந்து இன்று கைது செய்யப்பட்டுள்ளார். உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகளை ஏஐ புகைப்படங்கள் மூலம் பரப்புவதாக யூடியூபர் மாரிதாஸ் மீது தவெகவினர் புகார் கூறி வந்தனர்.
இந்த நிலையில் இன்று மதுரை வந்த சென்னை சைபர் கிரைம் போலீஸார், யூடியூபர் மாரிதாஸை கைது செய்தனர். கைதாவதற்கு முன் இதனை மாரிதாஸ் தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மதுரையில் கைது செய்யப்பட்டுள்ள மாரிதாஸை சென்னை அழைத்து வந்து விசாரணை மேற்கொள்ள போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
முன்னதாக தவெகவை விமர்சித்ததாக பாளையங்கோட்டையைச் சேர்ந்த ஜேம்ஸ் ராஜா கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். இதனிடையே யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டதற்கு பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
Summary
The Cyber Crime police have clarified that Maridhas was arrested for spreading slander by releasing an AI-generated photo of Industries Minister Keerthana.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.











