புதுச்சேரி தொழிலதிபரிடம் ரூ. 1.27 கோடி ஆன்லைன் டிரேடிங் மோசடி செய்த 3 பேரை சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்தனர்.
புதுச்சேரியைச் சேர்ந்த தொழிலதிபரிடம் ஆன்லைன் டிரேடிங் மூலம் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி ரூ. 1.27 கோடி மோசடி செய்த வழக்கில், பல மாநிலங்களில் தேடப்பட்டு வந்த 3 பேரை புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர்.
புகாரின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், மோசடி பணம் பல்வேறு வங்கிக் கணக்குகள் மூலம் பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாமக்கல், திருப்பூர், ஈரோடு பகுதிகளைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் (33), சதீஷ்குமார் (30), சந்தோஷ்குமார் (30) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து 2 லேப்டாப், 4 செல்போன்கள், 5 வங்கிக் கணக்கு புத்தகங்கள் மற்றும் 3 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இவர்கள் மீது மேற்குவங்கம், நாகாலாந்து உள்ளிட்ட பல மாநிலங்களில் 100-க்கும் மேற்பட்ட சைபர் மோசடி புகார்கள் இருப்பதும், கோடிக்கணக்கில் மோசடி செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Cyber crime police arrested three individuals for defrauding a Puducherry businessman of ₹1.27 crore in an online trading scam.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆன்லைன் வா்த்தகம் செய்வதாகக் கூறி ரூ.24 கோடி மோசடி: உதவிப் பேராசிரியா் உள்ளிட்ட 3 போ் கும்பல் கைது
தூத்துக்குடி இளைஞரிடம் ரூ. 75.25 லட்சம் மோசடி: திருச்சூரைச் சோ்ந்தவா் கைது

மாரிதாஸ் கைது ஏன்? சைபர் கிரைம் போலீஸார் விளக்கம்

ஆன்லைன் வா்த்தகத்தில் அதிக லாபம் தருவதாக தொழிலதிபரிடம் ரூ.72.75 லட்சம் மோசடி
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி




