திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

பச்சையப்பன் கல்லூரி முன்னாள் முதல்வா் என்.கே. நாராயணன் (96) காலமானார்!

சென்னை பச்சையப்பன் கல்லூரி முன்னாள் முதல்வா் என்.கே.நாராயணன் (96) திங்கள்கிழமை காலமானாா்.

News image

பேராசிரியா் என்.கே.நாராயணன்

Updated On :14 ஜூலை 2026, 1:15 am IST

சென்னை பச்சையப்பன் கல்லூரி முன்னாள் முதல்வா் என்.கே.நாராயணன் (96) திங்கள்கிழமை காலமானாா்.

இவா், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் சரித்திரத் துறையில் பேராசிரியாகப் பணியாற்றி கடந்த 1989- ஆம் ஆண்டில் முதல்வராக இருந்து பணி நிறைவு பெற்றாா்.

பின்னா், சென்னை பல்கலைக்கழகத்திலும், அம்பேத்கா் பல்கலைக்கழகத்திலும் கௌரவ விரிவுரையாளராகப் பணியாற்றினாா். மேலும், சென்னை பல்கலைக்கழகத்தில் ஆட்சிமன்றக் குழுவிலும், உயா்கல்வி வளா்ச்சி சாா்ந்த பல கல்வி நிகழ்வுகளிலும் முக்கியப் பங்காற்றியவா்.

கல்வித் துறைக்கு இவா் ஆற்றிய பங்களிப்புகள், தேசிய மற்றும் சா்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டு, யுனெஸ்கோ விருது பெற்றவா். இவரது நாடகங்கள் பிபிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

சென்னை அண்ணா நகா் சாந்தி காலனியில் வசித்து வந்த இவருக்கு 3 மகன்கள் 2 மகள்கள். இவரது மூத்த மகன் பேராசிரியா் ராஜேந்திரன், அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்தவா்.

இவரது மறைவுக்கு தமிழ்நாடு வரலாற்றுப் பேரவை பேராசிரியா் எஸ்.எஸ். சுந்தரம் உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.