தமிழ்நாட்டில், உடலுக்கு ஊறு விளைவிக்கும் வண்ண விண்ண நிறங்களில் விற்பனையாகும் கலர் அப்பளங்களுக்குத் தடை விதித்து உணவுப் பாதுகாப்புத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
குழந்தைகள், சிறுவர்களை அதிகம் ஈர்க்கும் வகையில், தமிழகத்தில் எங்குமே சந்தை, சுற்றுலா தலங்கள், பொருள் கட்சிகளில் கலர் அப்பளங்கள் விற்பனை செய்யக் கூடாது என்றும் உணவுப் பாதுகாப்புத் துறை பிறப்பித்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கலர் அப்பளம் விற்பனைக்குத் தடை விதித்து உணவுப் பாதுகாப்புத் துறை பிறப்பித்த உத்தரவில், கலர் அப்பளங்களைத் தொடர்ந்து சாப்பிடும் குழந்தைகளுக்கு அலர்ஜி, சிறுநீரக பாதிப்பு, புற்றுநோய் ஏற்படலாம்.
செயற்கை நிறமூட்டிகளை பயன்படுத்தி தயாரிக்கப்படும் அப்பளங்கள் உயிருக்கு ஆபத்தானது. எனவே தமிழ்நாட்டில் கலர் அப்பளம் விற்பனைக்கு தடை விதிக்கப்படுகிறது.
தரமான முறையில் உளுந்து மற்றும் அரிசி உள்ளிட்டவற்றில் தயாரிக்கப்படும் அப்பள வகைகளை வாங்கி சாப்பிடவும் குழந்தைகளுக்குக் கொடுக்கவும் மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
Summary
Ban on cancer-causing colored papads: Tamil Nadu Government
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











