சென்னை திருவல்லிக்கேணியில் ரூ.11 லட்சம் கள்ள நோட்டுகள் வைத்திருந்தவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை திருவல்லிக்கேணி சிஎன்கே சாலையில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் கள்ள நோட்டு கும்பல் பதுங்கியிருப்பதாக ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சென்னை திருவல்லிக்கேணி போலீஸாா் உதவியுடன் திருவல்லிக்கேணியில் உள்ள அந்த விடுதியில் புதன்கிழமை (ஜூலை 15) திடீா் சோதனை நடத்தினா்.
சோதனையில் ஷபீக் ரகுமான் (37) என்பவரிடமிருந்து ரூ.11 லட்சம் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அனைத்து நோட்டுகளும் ரூ. 500 ஆக இருந்துள்ளன. இது தொடா்பாக ரகுமானை கைது செய்து, விசாரணை செய்தனா்.
இவர் டிராவல்ஸ் நிறுவனமும், ஜவுளி வியாபாரமும் செய்து வருவதும், தனது வியாபாரத்தின் வழியாக கள்ள நோட்டுகளை புழகத்தில் விடுவதும் விசாரணையில் தெரிய வந்தது.
மேலும், ரகுமான் கொடுத்த தகவலின்பேரில், தஞ்சாவூரில் கள்ள நோட்டு வைத்திருந்ததாக ரவிச்சந்திரன் என்பவரும் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ரூ.22.79 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால் இவை அனைத்தும் உண்மையான நோட்டுகளாக இருந்தன.
தொடர்ந்து, இருவரிடமிருந்தும் பறிமுதல் செய்யப்பட்ட கடவுச்சீட்டுகளையும் (Passport - பாஸ்போர்ட்) போலீசார் ஆய்வு செய்தனர். அதில் அவர்கள் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று வந்தது தெரிய வந்தது. இதுகுறித்து அவர்களிடம் வினவியபோது முரணாகப் பதிலளித்தது சந்தேகத்தைக் கிளப்பியது.
அவர்கள் வெளிநாடுகளில் சந்தித்தவர்கள் குறித்து கேட்டபோதும் அவர்களிடம் பதில் இல்லை. மேலும், இவர்களின் கைப்பேசியில் உள்ள தொடர்புகளும் சந்தேகத்தைக் கிளப்புவதாகக் கூறப்படுகிறது. இதனிடயே, இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு தொடர்பேதும் இருக்கிறதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Summary
Counterfeit currency seizure in Chennai: Links to Pakistani terrorists?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்டு புழக்கத்தில்விட்ட ரூ.1 கோடி கள்ள நோட்டுகள்: மலேசிய பெண்ணைத் தேடும் போலீஸாா்
லஞ்சம்! சென்னை மாநகராட்சி அதிகாரிகள் 6 பேர் சஸ்பெண்ட்!

ரூ.11 லட்சம் கள்ளநோட்டுகள் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai


