சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த ரூ.5 கோடி மதிப்பிலான போதைப் பொருளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தின் கார்கோ பகுதியில் கேட்பாரற்று ஒரு பார்சல் கிடந்துள்ளது.
இது குறித்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அதனை பறிமுதல் சோதனை செய்தனர். அப்போது, அதில் இருந்தது மெத்தாம்பேட்டமைன் என்ற போதைப் பொருள்கள் என்பது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.5 கோடி என தெரிவித்தனர்.
இது தொடர்பான முதற்கட்ட விசாரணையில் ரசாயன பவுடர் என்ற பெயரில் மலேசியாவுக்கு போதைப் பொருளை கடந்த முயன்றது தெரியவந்துள்ளது.
போதைப்பொருள் விமான நிலையத்துக்கு எங்கிருந்து வந்தது குறித்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் சிசிடிவி காட்சி உதவியுடன் அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளதால் பலர் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மெத்தாம்பேட்டமைன் போதைப்பொருள் உற்பத்திக்கு சூடோ எபிட்ரின் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
Regarding the seizure of narcotics worth ₹5 crore found unclaimed at Chennai Airport...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.











