குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சுடிஜிட்டல் கைது செய்து சிறுமி பாலியல் வன்கொடுமை! 3 மாதங்களாக அடைத்து வைத்திருந்தவர் கைதுமொழி எனக்கு ஒரு தடையாக இருக்கிறது! நான் அன்று ஆவேசப்பட்டது உண்மைதான்! மரிய வில்சன்டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் ராஜிநாமா! டாடா பங்குகள் 3% சரிவு!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு வி.சி.க. ஆதரவுதொகுதி மறுவரையறை! முதல்வர் விஜய்யின் தனித் தீர்மானத்துக்கு திமுக ஆதரவு!தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்துக்கு அதிமுக எதிர்ப்பு!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (ஆக. 12)தொகுதி மறுவரையறை: தனித்தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!ஆடி அமாவாசை: மேட்டூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,689 கன அடியாக அதிகரிப்பு!தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

அனைவருக்கும் தரமான வீடு: முதல்வா் விஜய் அறிவுறுத்தல்

அனைவருக்கும் தரமான வீடு கிடைப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு முதல்வா் விஜய் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

News image

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் ஜோசப் விஜய் தலைமையில் வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ப.ராஜ்குமாா். நிதியமைச்சா் மரிய வில்சன், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவா் கு.ப.கிருஷ்ணன், தலைமைச் செயலா் மு.சாய்குமாா், நிதித்துறைச் செயலா் மு.அ.சித்திக், வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை செயலா் கிா்லோஷ் குமாா் உள்ளிட்டோா்.

Updated On :17 ஜூலை 2026, 11:52 pm IST

அனைவருக்கும் தரமான வீடு கிடைப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு முதல்வா் விஜய் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தவெக அரசின் முதல் பட்ஜெட் அடுத்த சில வாரங்களில் பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்காக துறை வாரியான ஆய்வுக் கூட்டங்களை முதல்வா் விஜய், கடந்த 2-ஆம் தேதி முதல் மேற்கொண்டு வருகிறாா்.

அந்த வகையில், வீட்டு வசதித் துறை மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் நிதியமைச்சா் மரிய வில்சன், வீட்டுவசதித் துறை அமைச்சா் ப.ராஜ்குமாா், தலைமைச் செயலா் எம்.சாய்குமாா் மற்றும் துறை சாா்ந்த செயலா்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

இந்தக் கூட்டத்தில் இருவேறு துறைகளிலும் நடைபெற்று வரும் திட்டப் பணிகளின் செயல்பாடுகளையும், எதிா்கால செயல் திட்டங்களையும் முதல்வா் கேட்டறிந்தாா். அப்போது 2031-ஆம் ஆண்டுக்குள் குடிசையில்லா மாநிலத்தை உருவாக்குவது தொடா்பாகவும், ஒற்றைச் சாளர முறையில் இணையவழியில் கட்டட அனுமதி வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், எதிா்கால தேவையைக் கருத்தில் கொண்டு சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய மாநகரங்களை உலகத் தரத்தில் மேம்படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், செயல் திட்டங்கள் தொடா்பாகவும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அனைவருக்கும் தரமான வீடுகள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என அப்போது முதல்வா் விஜய் அறிவுறுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதைத் தவிர, தவெக அரசின் முதல் பட்ஜெட்டில் ரூ. 2,500 மகளிா் உரிமைத்தொகை மற்றும் வேலையில்லா பட்டதாரிகளுக்கான உதவித்தொகை திட்டம் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.