தஞ்சாவூர்: தமிழக முதல்வர் விஜய் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்பது ஒரு ரசிகனாக எனது ஆசை என்றும், ஒரு சமானிய மனிதராக பார்த்த நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதே என்னுடைய ஆசை என திரைப்பட இயக்குநரும் அமைச்சருமான வினோத் தெரிவித்துள்ளார்.
நடிகரும் - தமிழக முதல்வருமான ஜோசப் விஜய் நடித்து வெளியாகும் அவரது 69 ஆவது திரைப்படமான ஜன நாயகன். ஆறு மாத கால போராட்டத்திற்கு பிறகு இன்று வெளியானதை ஒட்டி ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.
இயக்குர் எச். வினோத் - விஜய் கூட்டணியில் உருவான ஜன நாயகன் திரைப்படம் பல்வேறு பிரச்னைகளைக் கடந்து இன்று (ஜூலை 23) திரையரங்குகளில் வெளியானது.
தமிழகத்தில் காலை முதல் காட்சி 9 மணிக்கு வெளியான நிலையில் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
இதையொட்டி, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் ஜன நாயகன் படம் இன்று வெளியானதை ஒட்டி காலை முதல் அவரது தொண்டர்கள் உற்சாக கொண்டாடத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தனியார் திரையரங்கில் ரசிகர்களுடன் வேளாண்துறை அமைச்சர் கேக் - வெட்டி கொண்டாடிய பின்னர் படம் பார்த்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுடன் பேசுகையில், ஒரு ரசிகனாக பார்த்த முதல்வர் விஜய் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை, ஒரு சமானிய மனிதராக பார்த்த நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதே என்னுடைய ஆசை என அவர் தெரிவித்தார்.
Summary
It is my wish as a fan that Chief Minister Vijay should act again: Minister Vinoth
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











