FOLLOW US

ON GOOGLE DISCOVER

திரைப்படத்துக்கு கண்ணீர் வடிக்கும் ஆட்சியாளர்கள்! அருணாச்சலம் குடும்பத்துக்கு என்ன பதில்? உதயநிதி கண்டனம்தூத்துக்குடியில் காவல் மரணம்? காவல்துறை விளக்கம்!காரணம் கூறாமல் 3 மாதம் சிறை! தில்லியில் தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்! காசோலை மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை!தர்மேந்திர பிரதான் ராஜிநாமா வரை நாடாளுமன்றம் முடங்கும்! கார்கே திட்டவட்டம்50 ஆண்டுகள்! எம்ஜிஆருக்குப் பிறகு திரையரங்குகளில் ஹீரோவாக முதல்வர் விஜய்!தீவிரமடையும் போராட்டம்! மெரீனா மூடல்; மக்களுக்கு தடை!நீட் தேர்வை எதிர்த்து நாடாளுமன்றத்தில் திமுக தனியாகப் போராட்டம்! நாடாளுமன்றத்தில் இந்தியா - பாஜக கூட்டணிகள் எதிரெதிரே போராட்டம்!தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: மாணவர் கோரிக்கை நியாயமனது! - ராகுல் காந்திவிஜய் மீண்டும் படத்தில் நடிக்க வேண்டும் என ஆசை! அமைச்சர் வினோத்நீட் வழக்குகளை உடனடியாக விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள்! பிரதமர் மோடி
/

ஜனநாயகன் வெளியான திரையரங்கில் சுடச்சுட பிரியாணி! அமைச்சர்கள் அமர்க்களம்!

ஜனநாயகன் வெளியான திரையரங்கில் ரசிகர்களுக்கு சுடச்சுட பிரியாணி பரிமாறிய அமைச்சர்கள்

News image

ஜனநாயகன் - ani

Updated On :23 ஜூலை 2026, 2:54 pm IST

ஜனநாயகன் வெளியான திரையரங்கில் சுடச்சுட பிரியாணி! அமைச்சர்கள் அமர்க்களம்!

ஜனநாயன் திரைப்படத்தைக் காண வந்த ரசிகர்களுக்கு சுடச்சுட சிக்கன் பிரியாணி வழங்கி தமிழக அமைச்சர்கள் எஸ்.பி.கே. தென்னரசு , ஆர்.வீ. ரஞ்சித்குமார் ஆகியோர் ரசிகர்களுக்கு அவர்களே பரிமாறினர்.

தமிழக முதல்வர் விஜய் ஜோசப் கடைசியாக நடித்த திரைப்படமான ஜனநாயகன் பல்வேறு பிரச்சினைகளைத் தாண்டி இன்று தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் வெளியானது.

விஜய் ரசிகர்கள் இதனை பெரும் திருவிழாவாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். மேளம் தாளம், டிஜே நடனம் என ரசிகர்கள் திரையரங்கு முன்பு திரண்டு வந்து கொண்டாடி மகிழ்ந்தனர்.

அவ்வகையில் காஞ்சிபுரம் பாபு சினிமாஸ் திரையரங்கில் தமிழக அமைச்சர்கள் எஸ்.பி.கே. தென்னரசு மற்றும் ஆர்.வீ. ரஞ்சித்குமார் ஆகியோர் கட்சி நிர்வாகிகள் என பலரும் திரைப்படத்தைக் கண்டு ரசித்தனர்.

திரைப்படம் காண வரும் ரசிகர்கள் பசியாறும் வகையில், அமைச்சர் தென்னரசு ஏற்பாட்டின்பேரில் சிக்கன் பிரியாணி, லட்டு, ரைத்தா, கத்திரிக்காய் தொக்கு என உணவு வகைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திரைப்படம் பார்த்த ரசிகர்களுக்கு, அமைச்சர்கள் இருவரும் தங்கள் கைகளால் பிரியாணி பரிமாறினர்.

மேலும் வனத்துறை அமைச்சர் சார்பில் ரசிகர்களுக்கு சுற்றுச்சூழலை மேம்படுத்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்கும் வகையில் மரக்கன்றுகளுக்கு வழங்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.