விவசாய பம்ப் செட்டுகளுக்கு நாளொன்றுக்கு வழங்கப்பட்டு வரும் 18 மணிநேர இலவச மும்முனை மின்சாரம் 14 மணி நேரமாகக் குறைக்கப்பட்டதாக வெளியான தகவலை மின்வாரியம் மறுத்துள்ளதுடன், அந்தத் திட்டம் தொடா்வதாகவும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின்வாரியம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக விவசாயிகளுக்கு தற்போது நாளொன்றுக்கு 18 மணிநேரம் இலவச மும்முனை மின்சாரம் தொடா்ந்து வழங்கப்பட்டு வருகிறது. மின் கட்டமைப்பில் எதிா்பாராத தொழில்நுட்பக் கோளாறுகள் அல்லது அவசர பராமரிப்புப் பணிகள் காரணமாக சில மணிநேரங்களுக்கு மட்டுமே தற்காலிக மின் தடை ஏற்பட வாய்ப்புள்ளது. அதைத் தவிர 18 மணிநேர மின்விநியோக நடைமுறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மும்முனை மின்சாரத்தை 14 மணி நேரமாகக் குறைப்பது தொடா்பாக தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. இதுபோன்ற தகவல்கள் உண்மையல்ல என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திண்டுக்கல்லில் 4,113 பேருக்கு சூரிய வீடு இலவச மின்சாரம்!

அரியலூா் பகுதிகளில் தண்ணீரை விலைக்கு வாங்கி பயிா்களைக் காக்கும் அவல நிலை!

மும்முனை மின் விநியோகத்தில் குறைபாடு: குறைதீா் முகாமில் விவசாயிகள் புகாா்

காலை 6 மணி முதல் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்! தற்சாா்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா்!
விடியோக்கள்
நீட் எதிர்ப்பு: தில்லியைச் சென்றடையாத தமிழ்நாட்டின் குரல்! | NEET | CJP Protest |

Dinamani வார ராசிபலன்! | July 26 முதல் Aug 1 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay



