பரந்தூா் விமான நிலையத்தை வேறு இடத்தில் அமைப்பது தொடா்பாக இதுவரை மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்காதது ஏன்? என தமிழக அரசுக்கு நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கேள்வி எழுப்பியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தவெக அரசு பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்படாது என்றும், அந்த இடத்தில் தொழிற்பேட்டை அமைக்க முடிவெடுத்திருப்பதாகவும் அறிவித்தது. ஆனால், பரந்தூரிலிருந்து விமான நிலையத் திட்டத்தை வேறு இடத்துக்கு மாற்ற தமிழக அரசிடமிருந்து எவ்வித கோரிக்கையும் வரவில்லை என மத்திய விமான போக்குவரத்துத் துறை இணையமைச்சா் முரளிதா் மோஹோல் தெரிவித்துள்ளாா்.
பரந்தூரில் விமான நிலையத்தை மாற்று இடத்தில் அமைப்பது குறித்து இதுவரை மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்காதது ஏன்? பரந்தூா் விமானநிலையம் அமைப்பது குறித்த உண்மையான நிலைப்பாட்டை தமிழக மக்களுக்கு தவெக அரசு உடனடியாக விளக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா் சீமான்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பரந்தூா் விமான நிலைய திட்டம்: ஆய்வு செய்ய காங்கிரஸ் குழு அமைப்பு
ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என விமர்சித்த என்னுடன் ஏன் கூட்டணி வைத்தார் விஜய்? திருமாவளவன் கேள்வி

தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!

மத்திய அரசை எதிா்த்து பேசாதது ஏன்? முதல்வர் விஜய்க்கு ஆ.ராசா கேள்வி
விடியோக்கள்
நீட் எதிர்ப்பு: தில்லியைச் சென்றடையாத தமிழ்நாட்டின் குரல்! | NEET | CJP Protest |

Dinamani வார ராசிபலன்! | July 26 முதல் Aug 1 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay



