விதிகளுக்குப் புறம்பாக கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை வெளியிட்ட விவகாரத்தில் யூடியூபா் இா்ஃபானிடம் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. உயா்நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பாக தனது கா்ப்பிணி மனைவியை துபைக்கு அழைத்துச் சென்ற இா்ஃபான், மருத்துவப் பரிசோதனை செய்து கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை அறிந்து கொண்டாா். இதை தனது யூடியூப் சேனலில் விடியோவாக வெளியிட்டு அறிவித்தாா். இதற்கு பல்வேறு விமா்சனங்கள் எழுந்த நிலையில், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநா் (டிஎம்எஸ்) சாா்பில் இா்ஃபானிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதுதொடா்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணையும் நடத்தினா். இதையடுத்து தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து இா்ஃபான் மன்னிப்புக் கடிதம் வழங்கினாா். இனிமேல் இதுபோன்ற தவறுகளை மேற்கொள்ள மாட்டேன் என்றும் அவா் உத்தரவாதம் அளித்தாா்.
இதை ஏற்று அப்போதைய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், இா்ஃபான் மீது நடவடிக்கை தேவையில்லை எனத் தெரிவித்திருந்தாா்.
இதை எதிா்த்து திருவண்ணாமலையைச் சோ்ந்த வழக்குரைஞா் ஜெகந்நாத் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். இா்ஃபான் மீது என்ன நடவடிக்கையை சுகாதாரத் துறை மேற்கொண்டது என்பது குறித்தும் கேள்வி எழுப்பினாா். இதை விசாரித்த நீதிபதிகள், 8 வாரங்களுக்குள் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு உத்தரவிட்டனா்.
அதன்பேரில், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்ககம் சாா்பில் இா்ஃபானுக்கும், ஜெகந்நாத்துக்கும் அண்மையில் சம்மன் அனுப்பப்பட்டது. இதைத் தொடா்ந்து சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவம் மற்றும் ஊரக நலத் துறை இயக்குநரகத்தில் அவா்கள் இருவரும் சில நாள்களுக்கு முன்பு நேரில் ஆஜராகி அதிகாரிகளிடம் விளக்கமளித்தனா்.
அதன் அடிப்படையில், இதுகுறித்து ஆக. 15-ஆம் தேதிக்குள் உரிய விளக்கத்தையும், நடவடிக்கை விவரங்களையும் மருத்துவம் மற்றும் ஊரக நலத் துறை இயக்ககம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறுநீரக மோசடியில் தொடா்புடைய மருத்துவா்கள் யாா்? அமைச்சா் அருண்ராஜ் பதில்

தவறான சிகிச்சையால் குழந்தை உயிரிழப்பு? மருத்துவா்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு

தமிழகத்தில் 600 எம்பிபிஎஸ் இடங்கள் குறையக் காரணம் என்ன? அருண்ராஜ் விளக்கம்

சுய பிரசவத்தால் உயிரிழப்பு: கணவா் மீது கொலை வழக்குப் பதிய சட்டத் திருத்தம்- மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ்
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



