தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் தற்போதைய சூழலில் கர்நாடகத்துக்கு வர வேண்டாம் என்று கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் வேண்டுகோள் வைத்துள்ளார்.
காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறப்பதில் கர்நாடக அரசு முட்டுக்கட்டை போட்டுவந்தது. இந்த நிலையில், தில்லியில் நேற்று கூடிய காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில், தமிழ்நாட்டுக்கு ஒரு நாளைக்கு 3,500 கன அடி வீதம் 15 நாள்களுக்கு 4 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில், கர்நாடக மாநில துணை முதல்வர், நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் அம்மாநில முதல்வர் டி.கே. சிவகுமார் அவசர ஆலோசனையில் இன்று ஈடுபட்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டி.கே. சிவகுமார், காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.
மேலும், முதல்வர் விஜய்யின் வருகை குறித்து அவர் பேசியதாவது:
தமிழ்நாடு முதல்வர் விஜய் கர்நாடகத்துக்கு வருவதாக தெரிவித்துள்ளார். இன்னும் அவரது பயணம் உறுதியாகவில்லை. அவருடன் தொலைபேசியில் பேசியபோது, இரு மாநிலங்களில் நலன் சார்ந்த விஷயங்களை ஆலோசித்தோம்.
தற்போது கர்நாடகத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இத்தகைய சூழலில் தமிழ்நாடு முதல்வர் விஜய் வருகை தருவது சரியாக இருக்காது. அவர் வருகை தரும் போது கர்நாடகத்தில் போராட்டம் நடந்தால் எப்படி சமாளிப்பது. எங்களின் விருந்தினராக வரும்போது அவருக்கு பிரச்னை இருக்கக் கூடாது.
இரு மாநிலங்களும் பலன் பெறும் உரிய சூழல் வரும்போது இருவரும் நேரில் சந்திப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.
காவிரி பிரச்னை குறித்து பேசுவதற்காக, தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் வருகின்ற ஆகஸ்ட் 3, திங்கள்கிழமை அன்று பெங்களூருவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
Chief Minister Vijay should not come to Karnataka! D.K. Shivakumar's request!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழகத்துக்கு காவிரி நீர்: கர்நாடகம் மேல்முறையீடு செய்யும்

மேக்கேதாட்டுக்கு தீர்வு? ஆக. 3 கர்நாடகம் செல்கிறார் முதல்வர் விஜய்! அமைச்சர் தகவல்
இழுபறியில் கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்! தில்லி சென்றார் முதல்வர் சிவகுமார்!

40 நாள்களாகியும் நிரப்பப்படாத கர்நாடக அமைச்சரவை! முதல்வர் சிவகுமார் விரைவில் தில்லி பயணம்!
விடியோக்கள்

பிடிவாதம் செய்யும் கர்நாடகம்! தமிழக எம்.பிக்கள் சொல்வது என்ன? | Karnataka | TN | Parliament



