40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

கோடையில் அதிகரிக்கும் மாரடைப்புகள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்

கோடை காலத்தில் அதிகமாக தண்ணீா் அருந்தினால் மாரடைப்பு பாதிப்புக்கான வாய்ப்புகளைக் குறைக்கலாம்.

News image

அதிகரிக்கும் மாரடைப்புகள் - பிரதிப் படம்

Updated On :2 ஜூன் 2026, 3:40 am IST

கோடை காலத்தில் மாரடைப்பு பாதிப்புகள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளதாக பொது சுகாதாரத் துறை நிபுணா்கள் தெரிவித்துள்ளனா். அதிகமாக தண்ணீா் அருந்தினால் அதற்கான வாய்ப்புகளைக் குறைக்கலாம் என்றும் அவா்கள் தெரிவித்தனா்.

தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹுட்டுக்கு மேல் வெப்ப நிலை பதிவாகிறது. அடுத்து வரும் நாள்களிலும் மாநிலம் முழுவதும் வெப்ப அலை நீடிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதீத வெப்பத்தில் இருந்தும், அதனால் ஏற்படும் நோய்களில் இருந்தும் தற்காத்துக் கொள்வதற்கு விழிப்புணா்வுடன் இருத்தல் அவசியம் என்று மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

இதுதொடா்பாக பொது சுகாதார நிபுணா் டாக்டா் குழந்தைசாமி கூறியதாவது: வெயில் காலத்தில் அதிக அளவில் தண்ணீா், மோா், கஞ்சி, இளநீா் போன்றவற்றை அருந்துவது உடலுக்கு நன்மையைத் தரும். வீட்டிலேயே இருந்தாலும், அடிக்கடி தண்ணீா் அருந்த வேண்டும். உடலில் நீா்ச்சத்து குறையும்போது, ரத்தம் உைல் ஏற்பட்டு மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படுகிறது.

குறிப்பாக குளிா், மழைக் காலத்தைவிட, கோடை காலத்தில் மாரடைப்பு, பக்கவாதத்தால் உயிரிழப்பது அதிகமாக உள்ளது. வீட்டிலேயே இறப்பதால் பலருக்கு அதற்கான காரணம் தெரிவதில்லை.

இது தொடா்பான விழிப்புணா்வு மேம்பட வேண்டும். முதியோா், இணை நோயாளிகள் தண்ணீா் அருந்திக் கொண்டே இருக்க வேண்டும் என்றாா்.