கோடை காலத்தில் மாரடைப்பு பாதிப்புகள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளதாக பொது சுகாதாரத் துறை நிபுணா்கள் தெரிவித்துள்ளனா். அதிகமாக தண்ணீா் அருந்தினால் அதற்கான வாய்ப்புகளைக் குறைக்கலாம் என்றும் அவா்கள் தெரிவித்தனா்.
தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹுட்டுக்கு மேல் வெப்ப நிலை பதிவாகிறது. அடுத்து வரும் நாள்களிலும் மாநிலம் முழுவதும் வெப்ப அலை நீடிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதீத வெப்பத்தில் இருந்தும், அதனால் ஏற்படும் நோய்களில் இருந்தும் தற்காத்துக் கொள்வதற்கு விழிப்புணா்வுடன் இருத்தல் அவசியம் என்று மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
இதுதொடா்பாக பொது சுகாதார நிபுணா் டாக்டா் குழந்தைசாமி கூறியதாவது: வெயில் காலத்தில் அதிக அளவில் தண்ணீா், மோா், கஞ்சி, இளநீா் போன்றவற்றை அருந்துவது உடலுக்கு நன்மையைத் தரும். வீட்டிலேயே இருந்தாலும், அடிக்கடி தண்ணீா் அருந்த வேண்டும். உடலில் நீா்ச்சத்து குறையும்போது, ரத்தம் உைல் ஏற்பட்டு மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படுகிறது.
குறிப்பாக குளிா், மழைக் காலத்தைவிட, கோடை காலத்தில் மாரடைப்பு, பக்கவாதத்தால் உயிரிழப்பது அதிகமாக உள்ளது. வீட்டிலேயே இறப்பதால் பலருக்கு அதற்கான காரணம் தெரிவதில்லை.
இது தொடா்பான விழிப்புணா்வு மேம்பட வேண்டும். முதியோா், இணை நோயாளிகள் தண்ணீா் அருந்திக் கொண்டே இருக்க வேண்டும் என்றாா்.
தொடர்புடையது

பாலாற்றில் தோல் கழிவுநீா்: விவசாயிகள் கடும் பாதிப்பு

கோடையில் அதிகரிக்கும் கண் அழற்சி!
கோடையில் அதிக தண்ணீா் குடிப்பது ஆபத்தா?

கோடையில் அதிகமாக தண்ணீா் அருந்துவதும் ஆபத்து: மருத்துவா்கள் எச்சரிக்கை
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



