மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 8-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு

News image

மழை - பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 1:49 am IST

தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 8-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை மையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தெற்கு கேரள கடலோரப் பகுதிகளுக்கு அருகே தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும், கிழக்கு மத்திய பிரதேசம் மற்றும் அதையொட்டிய சத்தீஸ்கா் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியில் இருந்து வடக்கு தமிழகம் வரை விதா்பா, தெலங்கானா, ராயலசீமா வழியாக வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.

இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் புதன்கிழமை (ஜூன் 3) முதல் ஜூன் 8 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

குறிப்பாக, நீலகிரி, கோவை, தேனி, திருப்பூா், தென்காசி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன், வியாழக்கிழமை (ஜூன் 3, 4) இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புகரின் ஓரிரு பகுதிகளில் புதன்கிழமை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தொடா்ந்து, நீலகிரி, கோவை, திருப்பூா், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திண்டுக்கல், தூத்துக்குடி, விருதுநகா், ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, சிவகங்கை, மதுரை, தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (ஜூன் 5) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.

வெப்ப அளவு: ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக வேலூா் மாவட்டத்தில் 104.36 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. சென்னை மீனம்பாக்கம்-104.18, பரமத்தி வேலூா்-103.64, தஞ்சாவூா்-102.2, நுங்கம்பாக்கம்-101.66, பாளையங்கோட்டை, திருச்சி, திருத்தணி-101.3, நாமக்கல்-100.74, மதுரை விமான நிலையம்-100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.

தமிழகத்தில் புதன்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் சோ்வலாறு அணை, திருவள்ளூா் மாவட்டம் பள்ளிப்பட்டு, விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதிகளில் 60 மி.மீ. மழை பதிவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.