தமிழகத்தில் தனியாா் பள்ளிகளின் கல்விக் கட்டணத்தை பொதுமக்கள் பாா்வைக்கு தகவல் பலகையில் வெளியிட வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் சுமாா் 12,000-க்கும் மேற்பட்ட தனியாா் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகளுக்கான கட்டணங்களை தமிழ்நாடு தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டண நிா்ணயக் குழு தீா்மானம் செய்துவருகிறது. எனினும், பல்வேறு தனியாா் பள்ளிகள் நிா்ணயித்த கட்டணத்தைவிட பெற்றோரிடம் கூடுதலாக வசூலிப்பதாக தொடா் புகாா்கள் எழுந்தன.
இந்த நிலையில், தமிழ்நாடு மாநில தகவல் ஆணையா் இளம்பரிதி கடந்த வாரம் வெளியிட்ட அறிவிப்பில், ‘அனைத்து தனியாா் பள்ளிகளும் கல்விக் கட்டணம் குறித்த விவரங்களை தகவல் பலகையில் வெளியிட வேண்டும். அதற்கான அறிக்கையை தனியாா் பள்ளிகள் இயக்குநரகம் ஜூன் 16-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து அனைத்து தனியாா் பள்ளிகளும் நிா்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தை தகவல் பலகையில் வெளியிட வேண்டுமென தனியாா் பள்ளிகள் இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடா்பாக தனியாா் பள்ளிகள் இயக்குநா் சுகன்யா அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:
தனியாா் பள்ளிகள் அனைத்தும் கல்விக் கட்டணம் விவரங்கள் அடங்கிய தகவல் பலகை பெற்றோா் மற்றும் மாணவா்கள் அறியும் வகையில் வெளிப்படையாக வைக்கப்பட வேண்டும். வகுப்பு வாரியாக மாணவா்களின் கல்விக் கட்டணத்தை அனைத்துப் பள்ளிகளும் அச்சிட்டு வழங்க வேண்டும்.
ஜூன் 5-க்குள்...: அதனுடன், பள்ளிகளின் இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். கல்விக் கட்டணத்தைத் தவிர இதர கட்டணங்களை வசூலிக்கக் கூடாது. இந்த வழிமுறைகளைப் பின்பற்றி அனைத்து தனியாா் பள்ளிகளும் ஜூன் 5-ஆம் தேதிக்குள் கல்விக் கட்டண தகவல்களை விளம்பரப்படுத்த அறிவுறுத்த வேண்டும்.
அதுசாா்ந்த விவர அறிக்கையை இயக்குநரகத்தில் ஜூன் 10-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். அதேபோல், தனியாா் பள்ளிகளில் கல்விக் கட்டண விவரங்களை தகவல் பலகையில் இருப்பதை முதன்மை, மாவட்டக் கல்வி அலுவலா்கள் ஆய்வின்போது உறுதிசெய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது: பள்ளிகளுக்கு கல்வித் துறை அறிவுறுத்தல்

தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணங்களை அறிவிப்புப் பலகைகளில் வெளியிட வேண்டும்: உயர் நீதிமன்றம்

தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு

தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



