பருவமழை பாதிப்புகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து தமிழ்நாட்டுக்கு ரூ. 1,000 கோடி விடுவிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கேரளம், தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தொடங்கியிருக்கும் நிலையில், செய்யப்பட்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
“பேரிடர் மேலாண்மை துறைக்கு ரூ. 1,000 கோடி தேவை என்று மத்திய அரசிடம் தெரிவித்தோம். கேட்ட நிதியை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய அரசு விடுத்துள்ளது.
முதல்வரை பொறுத்தவரை செயல்பாடுதான் முக்கியம். அதன்மூலம் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என்பதை முக்கியமாக பார்க்கிறார். பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கம் அளிப்பதைவிட அவர் செயல்பாட்டில் காட்டுகிறார்.
இந்தியா கூட்டணியில் தவெக இணைவது குறித்த கொள்கை முடிவை முதல்வர் விஜய் அறிவிப்பார்.
கோவை, நீலகிரியில் பேரிடர் மேலாண்மை துறையினர் தயார் நிலையில் இருக்கிறார்கள். ஒருவேளை நீலகிரியில் நிலச்சரிவு ஏற்பட்டால் விரைவில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள ஹெலிகாப்டர் தயார் நிலையில் இருக்கின்றன” எனத் தெரிவித்துள்ளார்.
Summary
Disaster relief fund of ₹1,000 crore received in advance! Minister Sengottaiyan
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திறந்த மனதோடு இருக்கிறோம்! அமைச்சர் செங்கோட்டையன்!

அமைச்சர் செங்கோட்டையனின் துறை மாற்றம்!

அமைச்சரவை விரிவாக்கம் எப்போது? செங்கோட்டையன் பதில்!
என் வாழ்நாளில் நினைத்துப் பார்க்காத ஒன்று: செங்கோட்டையன்
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



