தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல! தங்கம் தென்னரசு விளக்கம்புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து: அமெரிக்க நீதிபதி உத்தரவு!சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வர் விஜய்யுடன் அன்புமணி சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை மீண்டும் தில்லி பயணம்!பணமோசடி வழக்கு: பினராயி விஜயன் மகளுக்கு அமலாக்கத் துறை சம்மன்!மாநிலங்களவைத் தேர்தல்: பிரவீண் சக்ரவர்த்தியின் வேட்புமனு ஏற்பு!பேரிடர் நிதி ரூ. 1,000 கோடி முன்கூட்டியே வரவு! அமைச்சர் செங்கோட்டையன்
/

தமிழகத்தில் மின்வெட்டு ஏன்? அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

தமிழகத்தில் மின்வெட்டு குறித்து அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்...

News image

அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார். - கோப்புப்படம்

Updated On :9 ஜூன் 2026, 1:22 pm IST

தமிழகத்தில் சில இடங்களில் வேண்டுமென்றே சிலர் மின்தடையை ஏற்படுத்துவதாகவும் மின்வெட்டு புகார் வந்தவுடன் உடனடியாக சரிசெய்யப்படுவதாகவும் அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.

தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு ஏற்படுவதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மின்வெட்டு குறித்த புகார்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குறிப்பாக சென்னையிலேயே பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் தொடர்ச்சியாக மின்வெட்டு ஏற்படுவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் மின்வெட்டு குறித்து அமைச்சர் நிர்மல்குமார் பதிலளிக்கையில்,

"மின்வெட்டு ஏற்படும் இடங்களில் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எங்கெங்கு மின்தடை ஏற்படுகிறதோ அங்கெல்லாம் சரிசெய்யப்பட்டு சமூக வலைத்தளங்கள் மூலமாக வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

பெரம்பூரில் மின்வெட்டு ஏற்பட்டவுடன் 40 நிமிடத்தில் சரிசெய்யப்பட்டு விட்டாலும், சிலரின் தூண்டுதலின்பேரில் போராட்டம் நடந்தது. மின்வெட்டு ஏற்பட்டவுடன் தெருவில் சென்று நிற்கச் சொல்லி குறுஞ்செய்தி அனுப்புகின்றனர். இதேபோல அரும்பாக்கத்திலும் ஏற்பட்ட மின்வெட்டு உடனடியாக சரிசெய்யப்பட்டது. திட்டமிட்டு விரும்பத்தகாத செயல்களில் சிலர் ஈடுபடுகின்றனர். பியூஸ் பிடுங்குவோர் சிலரை சிசிடிவி அடிப்படையில் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளோம்.

மின்னகம் மூலமாக புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இரவு நேரங்களில் கூடுதல் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

மின் விநியோகம் தொடர்பான குறைகளைப் போக்க குழுக்கள் அமைக்கப்பட உள்ளது. திட்டமிட்டு மின் தடையை ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களும் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும், சந்தேகத்திற்குரிய நபர்களைத் தெரிவிக்க வேண்டும்" என்று கூறினார்.

Summary

Why are there power cuts in Tamil Nadu, Minister Nirmal Kumar explains

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.