இன்றுமுதல் மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்மின் பயன்பாடு கணக்கெடுப்பதில் தாமதம்: கட்டணம் அதிகரிப்பால் பொதுமக்கள் அவதிநீலகிரி, கன்னியாகுமரி உள்பட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைகேரளம்: ஷிகெல்லா தொற்றால் பாதிக்கப்பட்ட 55 போ் மருத்துவமனையில் அனுமதிமேற்கு வங்கம்: தீ விபத்தில் 4,000 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

பொதுசேவை உரிமைச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்: அன்புமணி

News image

அன்புமணி

Updated On :12 ஜூன் 2026, 3:47 am IST

தோ்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டதைப்போல், பொதுசேவை பெறும் உரிமைச் சட்டத்தை தவெக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் உள்ளிட்ட 26 வகையான சான்றிதழ்களை 5 நாள்களுக்குள் வழங்குவதை கட்டாயமாக்கி அரசாணை பிறப்பிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மக்களுக்கு சேவை வழங்கும் அரசின் இந்த நோக்கம் நல்லதாக இருந்தாலும், இந்த அணுகுமுறை பயனளிக்காது. ஜாதிச் சான்றிதழ்கள் உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களும் மக்களுக்கு உடனுக்குடன் வழங்கப்பட வேண்டும். அவை குறித்த நேரத்தில் கிடைப்பதில்லை என்பதால், அவற்றின் நிலை குறித்து அறிய கிராம நிா்வாக அலுவலா்கள், வருவாய் அதிகாரிகள், வட்டாட்சியா் அலுவலகம் என மக்கள் அலைய வேண்டிய அவலம் தொடா்கிறது.

இந்த நிலையை மாற்றுவதற்கான ஒரே தீா்வு சேவை பெறும் உரிமை சட்டத்தை நிறைவேற்றுவது தான். அதைவிடுத்து இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிடுவதும், அரசாணைகளை எந்த வகையிலும் பயனளிக்காது. தவெக தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பொதுசேவை பெறும் உரிமைச் சட்டத்தை வரும் கூட்டத் தொடரில் நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.