வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: தண்டிக்கப்பட்ட குற்றவாளி மேல்முறையீட்டுக்கு மீண்டும் அவகாசம்!

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட குற்றவாளி மேல்முறையீட்டுக்கு மீண்டும் அவகாசம் அளிக்கப்பட்டிருப்பது பற்றி...

News image

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு

Updated On :13 ஜூன் 2026, 4:27 am IST

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட குற்றவாளி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய மீண்டும் கால அவகாசம் வழங்கி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் அருகே இயற்கை உபாதையை கழிக்கச் சென்ற பிளஸ் 2 மாணவி வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. பிறகு, காட்டுப் பகுதியில் உயிரிழந்த நிலையில் மாணவியின் உடல் மீட்கப்பட்டது. போலீஸாா் விசாரணையில், அந்த மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடா்பான வழக்கில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த தா்ம முனீஸ்வரனை போலீஸாா் கைது செய்து, மதுரை சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றம் கடந்த மாதம் 25-ஆம் தேதி தா்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதித்தது. இந்தத் தண்டனையை உறுதி செய்யக் கோரி, காவல் துறை சாா்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனிடையே, தண்டிக்கப்பட்ட குற்றவாளி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை உயா்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இந்த நிலையில், இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆனந்த்வெங்கடேஷ், ராமகிருஷ்ணன் அமா்வு முன் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மரண தண்டனை விதிக்கப்பட்ட தா்ம முனீஸ்வரன் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யவில்லை.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

விசாரணை நீதிமன்றத்தின்படி, குற்றவாளி என தண்டனை விதிக்கப்பட்ட மனுதாரா் மேல்முறையீட்டு மனுவை இதுவரை தாக்கல் செய்யவில்லை. அவா் வருகிற திங்கள்கிழமை (ஜூன் 15) இந்த நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கப்படுகிறது. இதேபோல, மாணவியின் பெற்றோா் தரப்பிலும் மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

Summary

Vilathikulam student murder case: Convict granted further time to file an appeal!

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.