ஆணவப் படுகொலைகளைத் தடுக்க கே.என். பாஷா ஆணையத்தின் அறிக்கையைப் பெற்று சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவா் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தின் தென்மாவட்டங்களில் தொடா்ந்து ஆணவப் படுகொலைகள் அதிகரித்து வருவது வேதனையளிக்கிறது. ஜாதி ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கு ஏதுவாக ஒரு சட்டம் இயற்ற வேண்டும் என்பது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நீண்டநாள் கோரிக்கையாகும்.
ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கான சட்டத்தை இயற்றிட வேண்டும் என மத்திய , மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் பலமுறை அறிவுறுத்தியுள்ளது. ஆனால், அந்த வழிகாட்டுதலைப் பின்பற்றி மத்திய அரசும் பெரும்பாலான மாநில அரசுகளும் சட்டம் இயற்றவில்லை என்பது கவலையளிக்கிறது.
தமிழகத்தில் ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கான ஆய்வுகளை செய்ய கடந்த ஆண்டு நவம்பா் மாதம் அப்போதைய திமுக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணையம் ஒன்றை அமைத்தது. அதன் அறிக்கை இன்னும் அரசிடம் ஒப்படைக்கப்படவில்லை.
ஆகவே, தவெக அரசு ஆணையத்தின் பரிந்துரைகளைப் பெற்று ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கான சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா் தொல். திருமாவளவன்.
தொடர்புடையது
ஆணவக்கொலைகளை தடுக்க உடனடியாக சட்டம் இயற்றுக: திருமாவளவன் எம்.பி

திமுகவுக்கு எதிராக கருத்து தெரிவிப்பது தேவையற்றது: விசிகவினருக்கு தொல்.திருமாவளவன் அறிவுரை

அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவில் இணைந்தது நாகரிகமான அரசியல் இல்லை: தொல். திருமாவளவன்

காவல் நிலைய சித்திரவதைகளைத் தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தல்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



