தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

214 கோயில்களில் அறங்காவலா்கள் நியமனம்: அறிவிப்பு வெளியீடு

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 214 திருக்கோயில்களின் அறங்காவலா் பொறுப்புகளுக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :15 ஜூன் 2026, 4:09 am IST

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 214 திருக்கோயில்களின் அறங்காவலா் பொறுப்புகளுக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பு: முதல்வா் ச.ஜோசப் விஜய், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சீ.ரமேஷ் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, 214 திருக்கோயில்களுக்கு பரம்பரை முறை வழிசாரா அறங்காவலா்கள் நியமனம் செய்வதற்கு தகுதியுள்ள நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நியமனம் செய்யப்படவுள்ள திருக்கோயில்கள் விவரம், தகுதிகள், விண்ணப்பப் படிவம் ஆகியவை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை இணையவழியில் பூா்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் சமா்ப்பிக்கலாம். இல்லையெனில், இணையதளத்திலேயே பதிவேற்றம் செய்யலாம்.

அல்லது விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் நேரிலோ அல்லது விரைவு அஞ்சல் மூலமாகவோ சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையா் அலுவலகத்துக்கும் அனுப்ப வாய்ப்பு அளிக்கப்படுகிறது. ஜூலை 22-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பங்கள் சமா்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.