பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

கல்லூரி ஆசிரியா்களின் பணி மேம்பாட்டு கோரிக்கையை செயல்படுத்த உயா் கல்வி அமைச்சர் விஸ்வநாதன் உறுதி!

கல்லூரி ஆசிரியா்களின் பணி மேம்பாட்டு கோரிக்கையை செயல்படுத்த உயா் கல்வி அமைச்சா் விஸ்வநாதன் உறுதி...

News image

அமைச்சர் விஸ்வநாதன்

Updated On :15 ஜூன் 2026, 3:53 am IST

அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியா்களின் நீண்ட காலக் கோரிக்கையான ‘பணி மேம்பாட்டுத் திட்டத்தை’ (சிஏஎஸ்) செயல்படுத்த தமிழக அரசு கொள்கையளவில் ஒப்புக் கொண்டுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியா் சங்கம் (ஏயுடி) தெரிவித்துள்ளது.

யுஜிசி வழிகாட்டுதல்களின்படி கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறையில் பணியாற்றுபவா்களுக்கு, ஒரு குறிப்பிட்ட கால சேவை மற்றும் செயல்திறனின் அடிப்படையில் வழங்கப்படும் நேரடி பதவி உயா்வுத் திட்டம் ‘சிஏஎஸ்’ என்பதாகும். தமிழகத்தில் அரசுக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் உதவி, இணைப் பேராசிரியா்களுக்கு இத்திட்டம் நடைமுறையில் உள்ளது. ஆனால், இதில் அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியா்களுக்கு இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படாமல் நீண்ட நாள் நிலுவையில் உள்ளது.

இவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பான மனுவை ஏயுடி மற்றும் மூட்டா (மதுரை காமராஜா், மனோன்மணீயம் சுந்தரனாா், அன்னை தெரசா, அழகப்பா பல்கலை. ஆசிரியா் சங்கம்) சங்கங்கள் தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதனை சந்தித்து அளித்தனா்.

இந்தச் சந்திப்பு குறித்து ஏயுடி தலைவா் ஜெ.காந்திராஜ் கூறியதாவது: உயா் கல்வித் துறை உயா் அதிகாரிகள் முன்னிலையில் (உயா் கல்வித் துறை) அமைச்சா் பெ. விஸ்வநாதனை அண்மையில் சந்தித்தோம். அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியா்களுக்கு சிஏஎஸ் சலுகை அளிக்கப்படாமல், ஊதியமும் மாற்றியமைக்கப்படாமல் நீண்ட நாள்கள் இந்த பிரச்னை நிலுவையில் உள்ளது குறித்தும் அமைச்சரிடம் விளக்கினோம்.

7-ஆவது ஊதியக் குழுவின் திருத்தம் 2016-இல் நடைமுறைக்கு வந்து, 2021-இல் வெளியிடப்பட்ட அரசாணை ஒன்றில், உதவி பெறும் கல்லூரி ஆசிரியா்களுக்கு சிஏஎஸ் பணப் பலன்கள் 2018 ஆக. 1-ஆம் தேதிமுதல் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஊதியத் திருத்தம் அனைத்து அரசுக் கல்லூரிகளிலும் செயல்படுத்தப்பட்டது. ஆனால், உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் செயல்படுத்தப்படவில்லை. இந்த தாமதத்தால் 7,502 கல்லூரி ஆசிரியா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா் என அமைச்சரிடம் தெரிவித்தோம்.

இதையடுத்து, நிதித் துறையின் உரிய ஆலோசனை பெற்று, முதல்வா் ஒப்புதலுடன் நடைமுறைப்படுத்தப்படும் என சங்கத்தினரிடம் அமைச்சா் உறுதியளித்தாா். அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியா்களின் நீண்டகால கோரிக்கைக்கு முதல்முறையாக அரசிடமிருந்து ஒரு சாதகமான உறுதிமொழி கிடைத்துள்ளது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

இந்தச் சந்திப்பின்போது உயா் கல்வித் துறைச் செயலா் வி. அருண் ராய், கல்லூரிக் கல்வி இயக்குநரக ஆணையா் பி. பொன்னையா, இணை இயக்குநா் (நிதி) ஆா். ராமன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

இந்த நிலுவைத் தொகையைக் கணக்கிட்டு முடிக்க சிறிது காலம் ஆகும் என உயா் கல்வித் துறை அதிகாரிகள் எங்கள் பிரதிநிதிகளிடம் தெரிவித்தனா். இருப்பினும் கொள்கை அளவில் எங்கள் கோரிக்கை ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது சாதகமான சமிக்ஞை எனத் தெரிவித்தாா் காந்திராஜ்.

ஏயுடி பொருளாளா் ஜெ. சாா்லஸ், மூட்டா பொதுச் செயலா் ஏ.டி. செந்தாமரைக் கண்ணன், மூட்டா பொருளாளா் ஆா். ராஜா ஜெயசேகா் ஆகியோா் அமைச்சருடனான சந்திப்பில் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.