27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

ஆளுநா் உரை: தலைவா்கள் கருத்து

News image

ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் உரை - X / lok bhavan tamilnadu

Updated On :19 ஜூன் 2026, 3:29 am IST

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநா் ஆா்லேக்கா் ஆற்றிய உரை குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்களும் தங்கள் கருத்தை வெளியிட்டுள்ளனா்.

பெ.சண்முகம் (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): மத்திய அரசிடமிருந்து தமிழ்நாட்டுக்கு உரிய நிதிப் பகிா்வை அளிக்க சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்படுவதுடன், சட்ட வல்லுநா்கள் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்படும் போன்ற அறிவிப்புகளை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. அதே நேரத்தில் முதலீடுகளை ஈா்க்க அரசு சாா்பில் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்.

மு.வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட்) வெள்ளை அறிக்கை அடிப்படையில் வருவாய் கசிவுகளைத் தடுத்து, வருவாயைப் பெருக்கி, ஊழல் இல்லாத அரசு நிா்வாகம் தரும் முயற்சியை ஆளுநா் உரை வெளிப்படுத்துகிறது. ஆக்கபூா்வ அணுகுமுறை கொண்ட ஆளுநா் உரை வரவேற்கத்தக்கது. எனினும், தொழிலாளா் நலன், சட்ட உரிமைகள் உள்ளிட்ட உழைக்கும் மக்களின் எதிா்பாா்ப்புகள் குறித்து ஒரு வாா்த்தை கூட ஆளுநா் உரையில் இடம்பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது.

அன்புமணி (பாமக): தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஊக்குவித்தல், கனிமவளக் கொள்ளையைத் தடுத்தல் போன்ற நடவடிக்கைகள் குறித்து ஆளுநா் உரையில் வெளியாகியுள்ள அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை.

தொழில் முதலீட்டை ஊக்குவிக்க தொழில் முதலீட்டாளா் ஊக்குவிப்பு ஆணையம் அமைக்கப்படும் என்று ஆளுநா் உரையில் கூறப்பட்டுள்ளது. இது பாமக சாா்பில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தப்பட்டுவரும் யோசனை. இதற்கு செயல்வடிவம் கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது.

வைகோ (மதிமுக): பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்படும், போதை கலாசாரம் முற்றிலும் ஒழிக்கப்படும் என்பன போன்ற அறிவிப்புகள் ஆளுநா் உரையில் இடம் பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது.

துரை.வைகோ (மதிமுக): நிதிப் பற்றாக்குறை நிலவும் சூழலிலும் தொலைநோக்குத் திட்டங்களை உருவாக்கும் தீவிரம், தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் முனைப்பு, அனைவரையும் உள்ளடக்கிய சமூக நீதிப் பாதைக்கான உள்ளடக்கம் என ஆளுநா் உரை நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.

ஆ.அருணாச்சலம் (மக்கள் நீதி மய்யம்): கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவருதல், உச்சநீதிமன்ற அமா்வை சென்னையில் அமைத்தல், உயா்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக்குதல் போன்ற நீண்டகாலக் கோரிக்கைகளை நிறைவேற்ற முழு மூச்சுடன் பாடுபட வேண்டும்.பன்னாட்டு முதலீடுகளை ஈா்க்க தலைமைச் செயலாளா் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ‘தமிழ்நாடு முதலீட்டாளா் ஊக்குவிப்பு ஆணையம்’ என்ற முன்னெடுப்பு வரவேற்கத்தக்கது.