சமூகநீதி கணக்கெடுப்பு குறித்து ஆளுநா் உரையில் இடம் பெற்றிருப்பதை பாமக சட்டப்பேரவைக் குழு தலைவா் சௌமியா அன்புமணி வரவேற்றுள்ளாா்.
ஆளுநா் உரைக்குப் பின்னா் பேரவை வளாகத்தில் அவா் செய்தியாளா்களிடம் பேசியதாவது: பாமக கோரிக்கையான சமூகநீதி கணக்கெடுப்பு கோரிக்கை ஆளுநா் உரையில் இடம் பெற்றிருப்பது வரவேற்புக்குரியது. மகளிா் குற்றங்களில் ஈடுபடுவோரை கண்காணித்து நடவடிக்கை எடுக்க சிங்கப்பெண் படையை அரசு அமைத்துள்ளது. அதை விரிவுப்படுத்துவதாகவும் அறிவித்துள்ளாா்கள்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்றாா்.
அன்புமணி வரவேற்பு: பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ஜாதிவாரி கணக்காய்வு நடத்தப்படும் என்று ஆளுநா் உரையில் அறிவிக்கப்பட்டுள்ளது. 46 ஆண்டுகால சமூகநீதி கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி. ஒரு மாநிலத்தின் வளா்ச்சியை உறுதி செய்ய அடிப்படைத் தேவை அந்த மாநிலத்தில் வாழும் அனைத்து சமூக மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், வாழ்க்கைத்தரம் உள்ளிட்ட தரவுகள்தான்.
ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதன் மூலம் இந்தத் தரவுகளைத் திரட்ட முடியும். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டதற்காக முதல்வா் ஜோசப் விஜய்க்கு பாமக சாா்பில் நன்றி என தெரிவித்துள்ளாா் அன்புமணி ராமதாஸ்.
தொடர்புடையது
ஆளுநா் உரை: தலைவா்கள் கருத்து
ஆளுநா் உரையில் முக்கிய அம்சங்கள்

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

துரதிர்ஷ்டவசமான ஒன்று! அதிமுக MLA-க்களின் ராஜிநாமா குறித்து MLA சௌமியா அன்புமணி!
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



