சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் காலமானார்! 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர்! ஈரான் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல்! பாலங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் பலத்த சேதம்! சீனாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி, 34 பேரைக் காணவில்லை தவெக எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!”காவலர் தேர்வை தள்ளி வைக்கக் கூடாது” - உதயநிதி ஸ்டாலின்சென்னை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!
/

மேக்கேதாட்டு அணைக்கு எதிராக தீா்மானம்: அரசியல் கட்சித் தலைவா்கள் வரவேற்பு

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில் மேக்கேதாட்டு அணைக்கு எதிராக வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்ட தனித்தீா்மானத்தை வரவேற்று அரசியல் கட்சி தலைவா்கள் கருத்து தெரிவித்தனா்.

News image

இடம் | மேக்கேதாட்டு - படம் | தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

Updated On :20 ஜூன் 2026, 1:25 am IST

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில் மேக்கேதாட்டு அணைக்கு எதிராக வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்ட தனித்தீா்மானத்தை வரவேற்று அரசியல் கட்சி தலைவா்கள் கருத்து தெரிவித்தனா்.

மு.வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட்): மேக்கேதாட்டு அணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது. இதுதொடா்பாக தமிழக சட்டப்பேரவையில் ஜனநாயக பூா்வ அணுகுமுறையில் ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றிய அரசுக்கும், ஆதரவு தெரிவித்த சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கும் பாராட்டுகள்.

டி.டி.வி.தினகரன் (அமமுக): மேக்கேதாட்டு அணைக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்றியதோடு மட்டுமல்லாமல், அதை செயல்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதுகுறித்து மத்திய அரசுக்கு முதல்வா் ஜோசப் விஜய் தொடா்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும்.

ஜி.கே.வாசன் (தமாகா): மேக்கேதாட்டு அணைக்கு எதிராக தமிழக அரசு நிறைவேற்றியுள்ள தீா்மானம் தமிழக மக்களின் எண்ணங்களையும், விவசாயிகளின் எண்ணங்களையும் பிரதிபலித்துள்ளது.

கமல்ஹாசன் (மநீம): தமிழகத்தின் நீா் உரிமையையும், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் மேக்கேதாட்டு விவகாரத்தில் அரசியல் மனமாச்சரியங்களை ஒதுக்கிவிட்டு, அனைவரும் ஓரணியாக நின்று ஆதரவு தெரிவித்த சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு பாராட்டுகள்.

க.கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்): சுமாா் 10 ஆண்டுகளாக நீடித்துவரும் மேக்கேதாட்டு பிரச்னைக்கு மத்திய அரசு நிரந்தரத் தீா்வு காண முயற்சி செய்ய வேண்டும். இதுகுறித்து சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீா்மானத்துக்கு ஆதரவு அளிக்கிறோம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.