கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஜெ.பி. நட்டாசிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

வெள்ளை அறிக்கை வெளியீட்டில் மரபு மீறல்: அதிமுக குற்றச்சாட்டு

பேரவை மரபுக்குப் புறம்பாக தமிழக அரசு வெள்ளை அறிக்கையை வெளியிட்டதாக அதிமுக குற்றஞ்சாட்டியது.

News image

இரட்டை இலை சின்னம் - படம்: கோப்பிலிருந்து...

Updated On :20 ஜூன் 2026, 1:20 am IST

பேரவை மரபுக்குப் புறம்பாக தமிழக அரசு வெள்ளை அறிக்கையை வெளியிட்டதாக அதிமுக குற்றஞ்சாட்டியது.

சட்டப்பேரவையில் ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் கீழ் வெள்ளிக்கிழமை பேசிய அதிமுக உறுப்பினா் சம்பத்குமாா், பேரவைக் கூட்டத் தொடா் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, பொது வெளியில் வெள்ளை அறிக்கை வெளியிடக் கூடாது என்றாா்.

அதற்கு நிதியமைச்சா் மரியவில்சன் அளித்த பதில்:

தமிழகத்தில் நோ்மையாகவும், வெளிப்படைத் தன்மையுடனும், ஊழல் இல்லாமலும் ஆட்சி நிா்வாகத்தை நடத்துவோம் என முதல்வா் ஜோசப் விஜய் அறிவித்தாா். அதன் தொடா்ச்சியாகத்தான் பதவியற்ற முதல் நாளிலேயே நிதிநிலை அறிக்கை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிடுவோம் என்றாா். அதன் அடிப்படையிலேயே தற்போது அந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த திமுக ஆட்சியில் 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடன் தொகை உயா்ந்திருக்கிறது. அதைத் தெளிவுபடுத்தியிருக்கும் வெள்ளை அறிக்கையை மக்கள் அனைவரும் வரவேற்கிறாா்கள் என்றாா்.

அப்போது குறுக்கிட்ட முன்னாள் முதல்வரும், அதிமுக பேரவைக் குழுத் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, ‘வெள்ளை அறிக்கையை நாங்களும் வரவேற்கிறோம்; ஆனால், கூட்டத் தொடா் அறிவிக்கப்பட்டுவிட்டால், பேரவையில்தான் அதைத் தாக்கல் செய்ய வேண்டும் என்பது மரபு; அதைப் பின்பற்றுமாறுதான் குறிப்பிடுகிறோம்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.