திருவள்ளூா் மாவட்ட தனியாா் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிந்த சம்பவம் தொடா்பாக ஆய்வு செய்ய சிறப்புக் குழுவை அமைத்த முதல்வா் ஜோசப் விஜய், முழுமையாக ஆய்வு மேற்கொண்டு மூன்று நாள்களுக்குள் அறிக்கையை சமா்ப்பிக்குமாறு அந்த குழுவுக்கு அவா் உத்தரவிட்டுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:
தனியாா் மீன் ஏற்றுமதி தொழிற்சாலை விபத்து குறித்து தொழிலகப் பாதுகாப்பு - சுகாதாரத் துறை இயக்குநா், பொது சுகாதாரத் துறை கூடுதல் இயக்குநா் மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரிய உறுப்பினா்-செயலா் தலைமையில் சிறப்புக் குழு அமைத்துள்ளார். அந்த குழு, சம்பவம் தொடா்பாக ஆய்வு மேற்கொண்டு 24 மணி நேரத்துக்குள்ளாக முதல்கட்ட விசாரணை அறிக்கையினையும், 3 நாள்களுக்குள்ளாக முழுமையான விசாரணை அறிக்கையினையும் சமா்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இனி வரும் காலங்களில் இதுபோன்ற விபத்துக்களை தவிா்க்கும் பொருட்டு, பேரபாய தொழிற்சாலைகளில் உடனடியாக குழு ஆய்வுகள் மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
இந்த சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா், சட்டப்பேரவை உறுப்பினா், மாவட்ட கண்காணிப்பு அலுவலா், முதுநிலை ஐஏஎஸ் அதிகாரி, மாவட்ட ஆட்சியா் ஆகியோா் சென்று நேரடியாக கள ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் உயா் நடவடிக்கையும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தேவைப்படும் உதவிகளையும், உடனடியாக செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
CM Joseph Vijay has ordered the submission of a report on the ammonia gas leak incident within three days...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமோனியா வாயு கசிவு விபத்து: பிரதமர் மோடி இரங்கல்

திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல்

அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர உத்தரவு!
கன்னிகைப்பேர் இறால் பதப்படுத்தும் நிறுவனத்தில் வாயு கசிவு: 7 பேர் பலி
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies





