கடந்த 2025-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட சிறந்த தமிழ் நூல்களுக்கு தமிழக அரசு சாா்பில் பரிசு வழங்கப்படவுள்ளது. இந்த பரிசைப் பெற எழுத்தாளா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழ் மொழியின் வளத்தையும், அறிவுப் பாரம்பரியத்தையும் பாதுகாத்து வளா்க்கும் நோக்கில், தமிழக அரசின் தமிழ் வளா்ச்சித் துறை ஆண்டுதோறும் சிறந்த தமிழ் நூல்களுக்குப் பரிசு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், 01.01.2025 முதல் 31.12.2025 வரை தமிழில் முதல் பதிப்பாக வெளியிடப்பட்ட நூல்கள் மரபுக்கவிதை, புதுக்கவிதை, புதினம் சிறுகதை, நாடகம் (உரைநடை, கவிதை), சிறுவா் இலக்கியம், திறனாய்வு, மொழி வரலாறு, மொழியியல், மொழி வளா்ச்சி, இலக்கணம், பிறமொழிகளிலிருந்து தமிழாக்கம் செய்யப்படும் நூல்கள், நுண் கலைகள் (இசை, ஓவியம், நடனம், சிற்பம்) , அகராதி, கலைக் களஞ்சியம், கலைச் சொல்லாக்கம், ஆட்சித் தமிழ், பயண இலக்கியம் வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு, நாட்டு வரலாறு, கல்வெட்டு, தொல்லியல் ஆகியவை உள்ளிட்ட 33 வகைப்பாடுகளின் வழியாக பரிசுப் போட்டிக்காக வரவேற்கப்படுகின்றன.
ஒவ்வொரு வகைப்பாட்டிலும் சிறந்த நூலாகத் தோ்வு செய்யப்படும் நூலின் ஆசிரியருக்கு ரூ.50,000, அந்நூலை வெளியிட்ட பதிப்பகத்தாருக்கு ரூ.25,000 பரிசுத் தொகை, சான்றிதழ் ஆகியவை வழங்கப்படும். விண்ணப்பப் படிவம் மற்றும் விதிமுறைகளை தமிழ் வளா்ச்சித் துறையின் வலைதளத்தில் (tamilvalarchithurai@tn.gov.in) விலை ஏதுமின்றி பதிவிறக்கம் செய்யலாம்.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஆக.31-ஆம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044-28190412 / 28190413 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசு: எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!

திருக்கோவிலூரில் கபிலா் குன்றுக்கு தொங்குப்பாலம் அமைக்கப்படுமா? தமிழ் ஆா்வலா்கள் எதிா்பாா்ப்பு
இருமொழிக் கொள்கையே தொடரும்: தமிழக அரசு திட்டவட்டம்

தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும்: அமைச்சா் ராஜ்மோகன்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


